Monday, April 24, 2017

மனிதனின் எதிர்பார்ப்பின் நிலை எத்தகையது

மனித இனம்..... சமூகத்திடமிருந்து பலவற்றை எதிர்பார்த்து கொண்டோ இருக்கும். அதில் முக்கியமானது உணர்ச்சி குவியல்!!! அன்பு, மகிழ்ச்சி , துக்கம் மற்றும் இன்னும் பல!!!!

ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்று வைத்து கொள்வோம். அதை மற்றொரு மனிதருடன் பகிரும் போது, அந்த நபரும்....அதே அளவிற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். எவ்வளவு அபத்தனமாக புரிதல்!!!!

நமக்கு உள களிப்பை ஏற்படுத்தும் காரியம் மற்றவருக்கும் களிப்பை ஏற்படுத்த வேண்டும்என்று எந்த அவசியமில்லை ?!??!

ஒவ்வொரு மனிதனுக்கும் மன களிப்பை தரும் விஷயங்கள் வேறுபாடானவை., காலம் ,சூழ்நிலை, வயது என்று பல்வேறு மாறுபாடுகளை உடையது.

ஒருவருக்கு பணம் சாம்பதிப்பது மகிழ்ச்சி என்றால், மற்றொருவருக்கு பணத்தை மீது வெறுப்பு இருக்கலாம். சிலருக்கு காதல் மீது வெறுப்பு

சிலருக்கு புகழ்ச்சி மீது வெறுப்பு!!! இப்படியாக சந்தோஷம் மற்றும் வெறுப்பு தரும் நிகழ்வுகள் வேறுபாடானவை!!

இருவருக்கு ஒரு மாதிரியான வேலை கிடைக்கிறது என்று வைத்து கொள்வோம். அதை ஒருவர் மிக்க மகிழ்ச்சியாக எடுத்து கொள்வார். மற்றொருவர்.... .அதே செய்தியை குறைந்த/மிதமாக மகிழ்ச்சியாக எடுத்து கொள்வார். இவையெல்லாம் மனித வாழ்க்கையில் மிக சாதாரண நிகழ்வுகளே!!!!

--------------------------------------------------------------------
இவையெல்லாம் தாண்டி, மற்றொருவரின் உணர்ச்சியை உள்வாங்கி கொண்டு, அதே உணர்ச்சியை குறைந்தபட்சமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதும் நாகரீகமாக புரிதல்!!! அதையும் மறந்து விட கூடாது!!!!

மனித மனங்கள் மிக விசத்திரமானவை.... முகம் பார்க்கும் கண்ணாடியாக... மற்றவரை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்!!!

விசத்திரங்களே மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துகின்றன என்பதும் நிகழ்கால நிழமே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment