Saturday, April 22, 2017

புத்தகம் வாங்கி குவிப்பது அவசியமா???

நாளைய தினம், உலக புத்தக தினம்……. புத்தக தினத்தை சிறப்பாக கொண்டாட, பெரும்பாலான பதிப்பகங்கள், சுமார் 20 முதல் 50 சதவீதம் வரையிலான கழிவினை அறிவித்துள்ளது. அதில் நானும் விகடன் மற்றும் எதிர் வெளியீட்டிலிருந்து பல புத்தகங்களை வாங்கினேன்.

இந்த புத்தகம் வாங்கும் மனநிலை என்பது அட்சய திருதியையில், நகை வாங்குவது போல் தான் தோன்றுகிறது. சில புத்தகங்கள் மட்டுமே, படிக்க முடிகிறது. மற்றவையெல்லாம் reference புத்தகம் போல மட்டுமே இருக்கிறது.

எப்போதும் போல், புத்தகம் படிக்கிறவன் அனைவரும்புத்திசாலி என்பது போன்ற கருத்தாக்கம் சமூகத்தில் நிலவுகிறது. அதில் 100 சதவீதம் பொய் இல்லையென்றாலும், 100 சதவீதமும் உண்மையும் அல்ல என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஆண்டு தோறும் பல கோடி புத்தகங்கள் விற்பனையாகி கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அது சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் பெரிதாக ஒன்றுமில்லை என்றே எண்ணுகிறேன்.

அதற்கான காரணமும் இல்லாமல் இல்லை. தமிழ் நூல்களில் பெரும்பாலானவை புனைவு இலக்கியங்களே….. அதனை தாண்டி கருத்து செறிவு தாண்டிய புத்தகங்கள் என்பவை மிக சொற்பமே!!! அப்படிப்பட்ட சமூகத்தில், புத்தகம் ஏற்படுத்திய சமூக தாக்கமும் குறைவானதே!!!!

அறிவை பெறக்கூடிய பல வழிமுறைகளில் ஒன்று புத்தகம். அதனை தாண்டி, சம காலத்தில் அறிவை பெறக்கூடிய சில வழிகளும் உள்ளன. Observation- ஒரு சம்பவத்தை பார்த்து…. அதிலிருந்து பல தகவலை/அறிவை பெறலாம். Inference- ஒரு சம்பவத்தை மற்றொன்றோடு தொடர்பு படுத்தி, அதிலிருந்தும் அறிவை பெறலாம். மேற்கண்ட இரண்டும்….. படிப்பறிவு இல்லாமலே அறிவை பெற தக்க வழிகள். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே, படிக்காதவர்கள் கூட நல்ல வெற்றியாளர்களாக சமூகத்தில் திகழலாம். அக்பரும், அசோகரும் இதற்கு சிறந்த எடுத்துகாட்டுகள். அதே சமயத்தில் மெத்த படித்த முகமது பின் துக்ளக்கின் ஆட்சி முறை பற்றி நாடே அறியும்.

Observation inference ஆகிய இரு வழிமுறைகளை புரிந்து கொள்ளாமல், document(புத்தகம்) மட்டுமே நம்பி, எவ்வித மாற்றத்தை ஏற்படுத்த இயலுமா???

அப்புறம்நீங்களும் புத்தகம் வாங்க மறந்துடாதீங்க!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment