Thursday, April 13, 2017

உயர்பண மதிப்பு இழப்பும் மனநிலை மாற்றமும்

பல மாதங்களுக்கு பிறகு, ATM ல் பணதட்டுபாடு இருப்பதாக முகநூல் ஆர்பாரித்து கொண்டிருந்தது. மற்ற இடங்களினை போல், வேதாராண்யமும்... இதற்கு தப்பவில்லை.

நேற்றிரவு வீடு திரும்புகையில், ஒரு தனியார் வங்கி ATM ல் பணம் இருப்பதை கண்டேன். வண்டியை நிறுத்தி விட்டு, வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால், சுமார் 7-8 பேர் நின்றார்கள். எந்தவித பதற்றமில்லாமல், 10 நிமிடத்தில் பணம் எடுத்து கொண்டு, இல்லம் நோக்கி பயணமானேன். .

நவம்பர் மாதத்தில், 2000 ரூபாயிற்காகவும், 4000 ரூபாயிற்காகவும் ஒரு மணி நேரம் நின்றது மனதில் வந்து சென்றது. முன்பெல்லாம் 2-3 பேர் நின்றால் கூட, மனம் பொறுமை இழந்து புலம்பும். ஆனால் பண மதிப்பிழப்பு கொள்கையினால், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகவே, எடிஎம் வாசலில் நிற்க பழகி விட்டோம். ஆதலால், நம்மை அறியமாலேநமக்குள் பொறுமை குணம் குடியேறி விட்டதோ!?!? என்று தோன்றியது.

ரன்னிங் ரேஸ்போல் ஒடி கொண்டிருக்கும் வாழ்க்கையில், தீடீரென பிரேக் போட்டது போல், இத்தகைய நிகழ்வு நடந்தது.. ” என்ன செய்வது என்று அறியாமல், ஒரு நிமிடம் மானுட இனம் திகைத்து நின்றது உண்மைஎன்றால் மிகையாது. பணத்தை தண்ணீர் போல் வாரி இரைத்து கொண்டிருந்திருந்த மனிதனுக்கு 100 ரூபாயின் மதிப்பு கூட தெரிய ஆரம்பித்தது.

உயர் பண மதிப்பு இழப்பு கொள்கையினால், பொதுமக்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் விடுத்து, மேற்கண்ட இரு உண்மைகளையும் மனித மனம் அறிய வேண்டிய அவசியம் என நினைக்கிறேன்.

போட்டி உலக சூழலில்…. பொறுமையும், பணத்தின் மதிப்பை உணர்தலும் காலத்தின் கட்டாயம். பெரிய சங்கடமாக இருந்தாலும், அதில் உள்ள சிறு நன்மை இது!!! சில நேரங்களில் கறை கூட நல்லது தான்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment