Sunday, June 22, 2014

Why not

மக்கள் விறகு, விரட்டி கொண்டு சமையல் செய்த காலம் மறைந்து, எரிவாய்வு மூலம் சமையல் செய்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தை தன்னுள் ஏற்படுத்தி கொண்டனர். அதற்காக அரசும் மானிய விலையில் எரிவாயு வழங்கி வருகிறது.

மத்திய அரசு சமையல் எரிவாய்வு சிலிண்டர் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தால், அதற்கான வழங்கப்படும் மானியத்தை குறைத்து விடலாம் என எண்ணியது. அதன் படி வருட்த்திற்கு 9 சிலிண்டர் மட்டுமே மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ராகுல் காந்தி வற்புறுத்தலால் 12 ஆக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

மத்திய ரிசர்வ் வங்கியும் நிதி ஆணையமும் மானியத்தை குறைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. புதிய அரசும் மானியத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை யோசித்து வருகிறது. சிலிண்டர் மீதான மானியத்தை சிறிது, சிறிதாக குறைத்து, பின்னர் முழுவதும் நிறுத்தி விடலாம் என யோசித்து வருகிறது. இதனால், சுமார் 8,000 கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. 

அதே சமயத்தில், வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஒருவனுக்கும் 10 லட்ச ரூபாய் வருமான வரி கட்டுபவனுக்கும் ஒரே மாதிரியான சிலிண்டர் மானியத்தை வழங்கி வருகிறது. இந்த முறை ஏற்று தக்கதாய் இல்லை.
அரசாங்க வேலை செய்பவர், தொழிலதிபர்கள், ஆகியோரை விடுத்து, கிராம ஏழை மக்களுக்கு மானியத்தை தொடர்ந்து வழங்கி, மக்களின் மீதான சுமையை குறைக்கலாம். வருமான வரி செலுத்துவோரின் அடிப்படையில், மானியத்தை வழங்க மத்திய அரசு பரிசிலிக்கலாம். அதற்கு அரசு ஆவண செய்யலாமே???

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||

||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

No comments:

Post a Comment