Sunday, June 22, 2014

மாணவனின் கனவா மருத்துவன்

நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்த அனைத்து மாணாக்கர்களுக்கும், எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நாளை முடிவடைகிறது. இன்றுடன் OC, BC, MBC, BCM போன்ற மாணவர்களுக்கான இடங்கள் முடிந்து விட்டன. இவை பெரும்பாலும் 197-198 கட் ஆப் மதிப்பெண் அளவிலே முடிவடைந்து உள்ளது. நாளை SC, ST மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.

OC, BC, MBC, BCM போன்றவர்களில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய மதிப்பெண் சதவீதம் 98-99% அளவிற்கு இருந்தும், சீட் கிடைக்கவில்லை என்பது மன வறுத்தமான விஷயம்.

நுழைவு தேர்வு தடை செய்யப்பட்ட பிறகு, இது மாதிரியான மன நெருக்கடிகளை மாணவர்களும், பெற்றோர்களும் சந்தித்து வருவது வருட வருடம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரமென்ன????

கடந்த பல ஆண்டுகளாக, மாணவர்கள் பெறும் மதிப்பெண் அதிகரித்து வருகிறது. அதற்கு சந்தோஷ பட்டாலும் கல்வி திறனில் பெரிய அளவிற்கு மாறுதல் இல்லை என்றே கல்வியாளர்கள் கூறுகின்றனர். IIT  மற்றும் UPSC தேர்வுகளிலும் தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவீத உயரவில்லையே என எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

மாணவர்களின் படிப்பு திறன் அதிகரித்து இருப்பதால், இனிமேல் மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார் ஆசிரியர்.
இன்னொரு காரணமாக, மருத்துவ படிப்பின் மீதான மோகம் அதிகரித்து இருப்பதும் உணமை. மருத்துவர்களின் மீதான அதிகப்படியான மரியாதையும், எளிதில் பணம் பெறக்கூடிய வழியாக இருப்பதால், அந்த பாதையில் பயணிக்க ஆசைப்படுவர்கள் அதிகமாகி வருகிறது.

இன்று மருத்துவ துறை, பணம் போட்டு முதலீடு பண்ணும் தொழிலாக மாறி இருக்கிறது என்றால் மிகையாது. இந்த ஊளவியலை பயன்படுத்தி, மாணவர் மற்றும் பெற்றோரின் பணம் சாம்பாதிக்கும் வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு கும்பல்கள் ஏராளம். இவற்றின் மதிப்பு பல லட்சங்களிலிருந்து சில கோடிகள் வரை இருக்கலாம்.
இஞ்சினிரியங் படிப்பின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் குறைந்ததும், மற்ற துறையை பற்றி விழிப்புணர்வு இல்லாத்தும் முக்கிய காரணம் ஆகும்.
மாணவர்களும் பெற்றோரும் துணை மருத்துவ படிப்பு, தகவல் தொழில் நுட்ப துறை, ஊடகவியல் துறை, கட்டுமான துறை, மார்கெட்டிங் துறை, விவசாய துறை, சினிமா போன்ற வளரும் துறைகளை பற்றிய அறிவும் தேவைப்படுகிறது. அதனை பள்ளி கூடங்களிலே மாணவர்களுக்கு தெரிய வைக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.

மருத்துவம் படித்தால் மட்டுமே வாழ்க்கை என்ற உளவியலை மாணவர் மனதில் சமுதாயம் ஏற்படுத்தி விடுகிறது. 2 வருட கடின உழைப்பு, இரவு பகல் தூக்கமின்மை, ஒழுங்கான உணவு இல்லாமை, டிவி, சினிமா பார்க்க முடியாமை, பெற்றோரின் தொடர்ந்த மன அழுத்தம் போன்ற பல மன இன்னலை சந்தித்து நல்ல மதிப்பெண் பெற்றும், மருத்துவராக முடியாத நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மதிப்பெண் பெற்றதான் வாழ்க்கை
மருத்துவர் ஆன மட்டும் தான் வாழ்க்கைஎன்ற ஊளவியலை விட்டு வாருங்கள் தம்பி, தங்கைகளே!!!! பள்ளி போகாமாலே சாதிக்க பிரபலங்கள் ஏராளம். டெண்டுல்கர், பில்கேட்ஸ், காமராசர் போன்று பட்டியல் நீளும்.

இந்த உலகம் பெரிது!!! வாய்ப்புகள் ஏராளம்!!!!
நம்பிக்கையோடு புதிய பாதையில் அடி எடுத்து வை!!!!
வெற்றி உன்னை கை கோர்க்கும்!!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||

||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

No comments:

Post a Comment