Sunday, June 1, 2014

சினிமா துறையின் காட்சி பொருளா சித்த மருத்துவன்?

கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம், பரத் நடிக்கும் ஐந்தாவது தலைமுறை சித்த வைத்திய சிகாமணிஎன்ற திரைப்படம் தயாரித்து வருகிறது.

பரத் ஒரு பரம்பரை சித்த வைத்தியர் என்றும், அவர் நந்திதாவை காதலிக்கிறார். அந்த விஷயம் நந்திதாவின் அப்பாவிற்கு தெரிய வர, பரத்தை ஆள் வைத்து அடிக்கிறார் பின்னர் மருத்துவர் என தெரிந்து கொண்டதும், நந்திதாவின் அப்பா ஓத்து கொள்கிறார். சித்த வைத்தியர்னு தெரிஞ்சா ஒத்து கொள்ளமாட்டார்கள். காதலிக்கிற பொண்ணும் கிடைக்க மாட்டாள், இதனால சித்த வைத்தியரான பரத், எம்.பி.பி.எஸ் டாக்டரா நடிச்சு பிரச்னைகளை சமாளிச்சு எப்படி நந்திதாவை கை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த கதை களம், சித்த மருத்துவர்களை கேலி செய்வதாக அமைக்கப்பட்டு இருப்பது கவலையளிக்கிறது. கதையின் தன்மைக்காகவும், காமெடிக்காவும் சித்த மருத்துவத்தை கீழ் தரமாக சித்தரிக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களில் ஊடக துறையில் இத்தகைய நிகழ்வுகள்  நடந்தே வருகிறது. நவீன சரஸ்வதி சபதம், பிதாமகன், உன்னை நினைத்து போன்றவை உதாரணங்கள். டிவிக்களில் வரும் மருத்துவ விளம்பரங்களை கொண்டே அமைப்பதாக திரைத்துறையினரும் காரணமாக கூறுகின்றனர்.

மக்களிடம் எடுத்து செல்வதற்கு, எல்லா துறையிலும் விளம்பரங்கள் அவசியமென்பது காலத்தின் கட்டாயமாகியது. மருத்துவ விதிமுறைகளுக்கு எதிராகமருத்துவ துறையிலும் விளம்பரங்கள் புகுந்து இருப்பது வருத்தமே.. .அதை அரசும் மருத்துவ கவுன்சிலும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.

சித்த மருத்துவமானது ஆண்மை குறைவு, குழந்தையின்மை போன்றவற்றை மட்டுமே தீர்க்கமென வெளிக்காட்ட படுவது ஆச்சரியம் அளிக்கிறது. சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற அவரச கால நோய்களை சித்த மருத்துவம் குணப்படுத்தியதை வரலாறு மறந்து விட்டதா?. பாரம்பரிய மருத்துவ முறைகளால், தீர்க்க முடியாத நோய்களை குணப்படுத்தினாலும் ஊடகத்தின் கண்களுக்கு கொண்டு செல்லாதது மருத்துவர்களின் குறைபாடு.

 கடந்த நூற்றாண்டில் காலடி எடுத்த வைத்த ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக பாரம்பரிய மருத்துவம், வளரவில்லை என்பது நிதர்சனம். அதற்கான நடைமுறைகளை அரசும் மருத்துவர்களும் மருத்துவ சமூகமும் முன்னெடுத்து செல்லாதது சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு தடையாகியது. மக்களிடம் கொண்டு செல்வதில் ஏற்பட்ட குறைபாடே, பாரம்பாரிய மருத்துவத்தை மறந்து விட ஏதுவதாக மாறியது. இதை சித்த மருத்துவ சமூகம் மறந்து விட்டது ஏனோ?..

சினிமா துறையில் காட்சி பொருளாக மாறி விட்ட சித்த மருத்துவர்களின், காட்சி பிழைகளை நீக்க சினிமா துறை முன் வர வேண்டும். உண்மை நிலையை பிரதிபலிக்க விட்டாலும், பிழையான பிரதிபலிப்பை காட்ட வேண்டாம் என்பதே சித்த மருத்துவர்களின் கோரிக்கை..

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 




No comments:

Post a Comment