விளம்பர
உத்திகள் காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன
என்பது உண்மை. ஆனால், அந்த
உத்தி முறைகள், தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக
உள்ளதை, நிச்சயமாக ஏற்று கொள்ள முடியாது.
வேறொருவரை
நபரை போன் மூலமாக தொடர்பு
கொள்ள நினைத்தால்….. ரிங்க் போவதற்கு முன்னரே,
சில விளம்பரங்கள் வருகின்றன. இது மிகவும் எரிச்சல்
அடைய செய்கிறது. அதாவது 100 ரீசர்ச் செய்தால், இத்தனை
நிமிடங்கள் இலவசம் என்கிறது. அவசரத்திற்கு
போன் செய்யும் போது, இப்படியாக வந்தால்…..
போன் செய்ய நினைத்தவரின் மனநிலையை
எண்ணி பாருங்களேன்!!!
நிறுவனங்கள்
தன்னுடைய ஆபர்களை, குறுங்செய்தி மூலம் அனுப்பி வந்தது.
அதனை பெரும்பாலும் படிக்காமலே அழிக்கும் நிலை தான் இருக்கிறது.
ஆதனால், அடுத்த படிநிலையாக, போன்
செய்து ஆபர் சொல்லும் நிலையும்
உள்ளது. இந்த தொல்லைகளினால், தொலைத்தொடர்பு
நிறுவனங்களின் போன் என்றாலே, யாரும்
எடுப்பதில்லை.
ஆனால் தான், நாம் மற்றொருவரை
தொடர்பு கொள்ள நினைக்கும் போது,
ரீங் வருவதற்கு முன்னர் விளம்பரம் செய்ய
ஆரம்பித்து விட்டார்கள். இது மாதிரியான விளம்பரங்களை
கேட்டு பிறகு தான், ரீங்க்
போகும். இதெல்லாம் அப்பட்டமான தனி மனித மீறல்!!!
அரசியலமைப்பு சட்டம்- சரத் 21 மீறுவதாகவே
எண்ணுகிறேன். இது கண்டிக்க தக்கது!!!
அதன் அடுத்த படிநிலையாக, வேறொரு
வகையான விளம்பரங்களை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செய்து
வருகின்றன.
நான் ஏர்செல் நெட்வெர்க்கையை பயன்படுத்தி
வருகின்றேன். அந்நிறுவனம் ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆதலால்,
தன்னுடைய சேவையை நிறுத்த போவதாக
கூட புரளிகள் வெளிவந்தன. இது அனைவரும் அறிந்ததே!!!
நான் போன் செய்யும் போது,
ரிங்க் ஆவதற்கு முன்னால், “ நீங்கள்
நம்பரை மாற்றாமலே, ஐடியா/ வோடபோன் நெட்வெர்க்கை
மாற்றி கொள்ளலலாம்” என்று விளம்பரம் வருகிறது.
எந்த நெட்வெர்க்கை தேர்வு செய்ய வேண்டும்
என்பது என்னுடைய தனி மனித உரிமை!!!
இந்த நெட்வெர்க்கை நீங்கள் பயன்படுத்துங்கள் என்று
யாராலும் கட்டளையிட முடியாது!!! ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின்
விளம்பரம், மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில்
எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்று புரியவில்லை!!!
இந்த விளம்பரத்தை, ஏர்செல் நிறுவனமே, முன்னின்று
செய்கிறதா?? அல்லது, ஐடியா/ வோடபோன்
போன்ற நிறுவனங்கள் செய்கிறதா??? புரிந்து கொள்ள இயலவில்லை!!!
விளம்பரம்
என்பது, நுகர்வு கலாச்சாரத்தின் அங்கமாக
மாறி விட்ட நிலையில், விளம்பரங்கள்
செய்வதை தவறென்று கூறவில்லை. அதே சமயத்தில், அடுத்தவரின்
தனிமனித உரிமை மீறுவதாக இருப்பது்ம்,
இதனை வாங்கியே ஆக வேண்டும் என்பது
போன்ற வியாபார உத்திகளை, எவ்வகையில்
சேர்ப்பதோ????
நிச்சயமாக!!!
இன்னும் பத்தாண்டுகளில், விளம்பரங்கள் மீது அளவிட முடியாத
வெறுப்பு வரும் என்பது மட்டும்
உண்மை!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment