Monday, November 20, 2017

வட்டிக்கு கொடுத்தலும், வட்டி விகித மாறுபாடும்


கெளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரம் படித்து கொண்டிருந்தேன். அதில் கடனுக்கான வட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு வகையான வட்டி விகிதங்கள் குறிப்பிட பட்டிருந்தது. ஆச்சரியமான விசயம்!!! சுமார் 2500 ஆண்டுகள் முன்னரே, இவ்வகையான தகவல்கள் இருப்பது ஆச்சரியம் தானே!!!!

அதில் திருமணம் மற்றும் இன்ன பிற விஷேசங்களுக்கு வட்டி விகிதம் 1.25 சதவீதமாகவும், வியாபாரத்திற்கான வட்டி விகிதம் 5% மாகவும், வெளிநாட்டு வியாபாரங்கள் 10 சதவீதம் வரை, வட்டி வசுலிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வகையான வட்டி வேறுபாடுகளுக்கான காரணங்களும் குறிப்பிட பட்டிருந்தது. வியாபாரம் செய்யும் போது, நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கிறது. கடன் கொடுத்த தொகை வராமலும் போகலாம். மேலும் லாப சதவீதமும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்யும், மேற்கூறிய சாத்திய கூறுகள் இன்னும் அதிகமாக இருக்கும். ஆதலால், வட்டி விகிதம் இன்னும் அதிகமாகும்!!

நிற்க!!!!

மேற்கூரிய கூற்றுகளிலிருந்து தெரிய கூடிய முக்கியமான விஷயம் என்னவென்றால்………. கடன் கொடுத்த தொகை, வாராமல் இருப்பது அதிகமாகும் போது, வட்டி விகிதம் அதிகமாகி நிற்கும்!!!! இதனை இக்காலத்திற்கும் எளிதாக பொருத்தி பார்க்கலாம்!!!!

முற்காலங்களிலும், கடன் கொடுத்த தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருந்தது. ஆனால், காலங்கள் செல்ல, அந்த தன்மை வெகுவாக குறைந்துள்ளது. இதில் ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. பணக்காரனுக்கு கோடி என்றால், ஏழைக்கு ஆயிரம் அவ்வளவு தான் வித்தியாசம்!!!!

இப்போது கடன் அளித்தல் என்பது தொழிலாகி விட்டது. ஆதலால், கடன் கொடுக்கப்படும் தொகை முழுவதும் திரும்பி வருமா??? என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகி விடும் போது, வட்டி விகிதம் அதிகமாகி விடுவதில் ஆச்சரியப்படுவதில்லை.

வட்டி விகிதம் அதிகரிப்பதற்கு, இத்தகைய மக்களின் மனநிலை மட்டுமே காரணம் என்று கூறவில்லை!!! இதுவும் ஒர் காரணம் என்பதே என்னுடைய வாதம்!!!! சாதிய பின்புலம், அரசியல், அதிகார மைய தர்க்கம் என்று பட்டியலை நீட்டி கொண்டே போகும்!!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment