Saturday, November 25, 2017

போட்டி பயிற்சி மையங்களும் , அதன் உண்மை நிலையும்


வட தமிழகத்தில் சில பகுதிகளின் வழியாக பேருந்தில் பயணம் செய்த போது, அங்காங்கே கண்ட விளம்பரங்கள், சில கேள்விகளை என்னுள் எழுப்பியது. இந்த கேள்விகள் எனக்கு புதிதல்ல!!!! தமிழகத்தில் புற்றீசல் போல் தோன்றும் தனியார் பள்ளிகளின் கற்பிக்கும் திறன் குறித்து, இதுமாதிரியான கேள்வி கணைகள் தோன்றியுள்ளது !!!! கற்பிக்கும் ஆசிரியர்களில் பல பேர், தமிழ் வழி கல்வி முடித்து, ஆங்கில வழி கல்வி முறை கற்பிப்பவர்கள்!!!!

சரி!!! அதை விடுங்கள்!!! என்னுடைய கேள்விக்கு வருவோம்!!!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் அறிவிக்கப்பட்ட CCSE IV தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடக்கிறது. அத்தேர்விற்காக, ஒவ்வொரு ஊரிலும் பல பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் முளைத்திருக்கிறது. இந்த எண்ணிக்கை 4-10 வரை வேறுபடுமே தவிர, பயிற்சி மையங்கள் இல்லாத ஊர் இல்லை எனலாம்.

இத்தனை மையங்களுக்கு பயிற்றுநர்கள் எங்கு உள்ளனர்????” என்பதே என்னுடைய கேள்வி.

காலம் காலமாக, பணியாளர் தேர்வாணையத்தின் வழியாக தேர்வு நடந்தாலும், போட்டி தேர்வுகள் குறித்த விழுப்புணர்வு, தனியார் துறையின் வீழ்ச்சிக்கு பிறகே அதிகமானது். இருந்த போதிலும், அனைத்தும் மையங்களுக்கு போதுமான பயிற்றுநர்கள் இருக்கிறார்களா என்பது, மிகப்பெரிய கேள்விக்குறி தான்!!!

அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் திறமை குறித்த சந்தேகம் இல்லை. போட்டி தேர்வுகளுக்கு நடத்தும் அளவிற்கு திறமையுள்ளவர்களா ???? என்பதே எனது கேள்வி!!!!

தமிழ்நாடு முழுவதும் 10-15 லட்சம் போட்டியாளர்கள், தேர்வு எழுத வாய்ப்புள்ளது. அதில் ஒவ்வொரு பயிற்சி நிறுவனத்தில் 100 பேர் சேர்ந்தாலே, கணிசமாக தொகை பணமாக பெற இயலும். அந்த போட்டியாளர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தை, பணமாக்கும் முயற்சி ஈடுபடுகிறமோ??? என்ற எண்ண தோன்றுகிறது.

பெருநகரங்களிலே, பயிற்றுநர்கள் குறைவாக இருக்கும் போது, சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களை பற்றி கேட்க வேண்டியதில்லை!!

இலவச பயிற்சி மையங்கள் மீது, இதே கேள்வியை நான் வைக்கிறேன். உங்களின் இலவச சேவையில் கேள்வியில்லை!!! ஆனால், பயிற்சி உள்ள தரத்தை குறித்தே!!!

வடிவேல் படத்தில் சொல்லும் நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. “ பில்டிங்க் ஸ்டிராங்க் தான், ஆனா பேஸ்மெட் தான் கொஞ்சம் வீக்என்பது போல, ஒரு செயலின் அடிப்படை சரியாக இல்லையென்றால், அதன் விளைவும் நிச்சயமாக சரியாக இருக்காது!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment