” மனநிறைவை தந்து
விடும் செயல், உலகில் உண்டோ??? ” என்று பல நேரங்களில் எண்ணுவது உண்டு. நிரந்தரமாக மனநிறைவை
தந்து விடும் செயல் நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். ஆனால், தற்காலிகமாக,
மனநிறைவை தந்து விடும் செயல்/நிகழ்வு உண்டென்றே கருதுகிறேன்.
வேலை தேடி கொண்டிருப்பவனுக்கு,
அரசாங்க வேலை கிடைக்கும் போது, மனநிறைவு உண்டாகும். திருமணத்தினை எதிர்ப்பார்த்து கொண்டிருப்பவனுக்கு,
திருமண நிகழ்வு மனநிறைவை தரலாம். அது போல், பிள்ளை பேறு, போட்டியில் வெல்லுதல், விளையாட்டில்
சிறப்பு நிலை பெறுதல் என பட்டியல் நீளும். ஆனால், இவையெல்லாம், தற்காலிக மன நிறைவையே
தரும்!!!
மாஸ்லோ படிநிலை
தேவை(Maslow's hierarchy of needs ) அடிப்படையில், மேற்கண்ட அனைத்தும், தற்காலிக தீர்வுகளே!!!
ஒரு தேவை கிடைத்து விட்டால், மற்றொரு தேவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடும்.
எ.கா. வேலை கிடைத்தால்
போதும் என்று போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்போம். போட்டி தேர்வுகளில் தேர்ச்சி
பெற்று விட்டால், நல்ல துறை வேண்டும் என்று எண்ணுவோம். அந்த வேலை எளிதாக இருக்க வேண்டும்
என்று எண்ணுவோம். அந்த வேலை, நமது விட்டுக்கு அருகிலோ இருக்க வேண்டும் என்று எண்ணுவோம்.
இப்படியாக விருப்பங்கள் மாறி கொண்டோ இருக்குமே தவிர, நிலைபெற்று முடிவாக, எதிலும் மனநிறைவு
அடைய மாட்டோம்!!!
இது மனித எண்ணத்தின்
தவறன்று!!! கால சூழ்நிலையில் அகப்பட்டு கொள்ளும், சுழ்நிலை கைதியின் தவறு!!! எதிர்ப்பார்ப்புகள்
இல்லாத வாழ்க்கையை பெற, நாம் ஒன்றும் முனிவரல்ல!!! இத்தகைய முரண்பாடுகளே, வாழ்க்கை
சுவராசியம் அடைகிறது. சரி அதை விடுங்கள்!!!
எனக்கும், மேற்கண்ட
தற்காலிக மனநிறைவு ஏற்பட்ட தருணங்களும் உண்டு!!! இதையெல்லாம் தாண்டி, மனநிறைவு தரும்
இன்னொரு விஷயமும் உண்டு!!! அது வேறொன்றுமில்லை!! புத்தக வாசிப்பு தான்!!!
தினமும் வாசிப்பின்
மூலம், பல்வேறு தகவல்களை பெற்று கொண்டே இருப்பேன்!!! அதற்கு எல்லையும் கிடையாது!!!
தகவல்கள் பெறாத நாள், முழுமையற்ற நாளாக கடந்து போனதாக உணர்ந்த தருணங்களும் உண்டு!!!
அதற்கு நேர் எதிர்
மாறாக, சில தினங்கள் மனநிறைவினை பெற்று, தூக்கமற்ற இரவுகளாக கடந்த தருணங்களும் உண்டு!!!
நேற்றைய தினம், தமிழ்நாட்டு நிர்வாகம் சம்பந்தமான தகவல்களை சேகரித்த போது, அம்மனநிறைவு
ஏற்பட்டது.
இத்தகைய நிலை,
ஏற்கனவே பல தருணங்களில் ஏற்பட்டதுண்டு. சித்த மருத்துவ தத்துவம், உளவியல், வாழ்வியல்
புரிதல், இறை நம்பிக்கை புரிதல், மூடநம்பிக்கை சார்ந்த இறையியல், இந்திய தத்துவ ஞானம்
என்று பட்டியல் அதிகமாக உள்ளது.
”
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் –”
என்ற குறள் கூட
உண்மை தான் போலும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment