Saturday, December 30, 2017

புத்தாண்டு வாழ்த்துகள்!!!


2017 ஆம் ஆண்டு எப்படி கடந்தது என்று எல்லோரும் எழுதுறாங்க!!! நானும் எழுதுலாம் பார்த்தா…. ஒன்னுமே நியாபகம் இல்லை!!! எதாவுது உருப்புடியா பண்ணா தானே வரும்!?!?!?!?

எந்த எதிர்ப்பார்ப்புகள் இல்லாத தொடக்கத்தினால், எவ்வித வருத்தங்களும் பெரிதாக இல்லை!!! தினம் ஒரு மேனியாய், விடுமுறைகள் கூட அற்று, வருடம் உருண்டோடியது!!!

வருடத்தின் ஆரம்பத்தில், மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைத்தேன். மூலிகைகளின் எண்ணிக்கையை அதிகமாகவில்லையே தவிர, இருக்கும் மூலிகைகள் சிறப்பாகவே உள்ளது!! அதை இன்னும் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம்!!!

செம்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பரவிய டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக நிலவேம்பு குடிநீர் வழங்கினோம்! பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிலையங்கள் என பட்டியல் நீண்டது. மனநிறைவு தந்தது!!! நிறைய அதிகாரிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததால், என்னுடைய நட்பு வட்டம் விசாலமாகியது!!!

மருத்துவ துறையின் தனிப்பயிற்சியில் பெரியளவு முன்னேற்றம் இல்லை. மந்த நிலையிலேயே தொடர்கிறது.

குடும்பத்தின் பொருளாதார சுமையை, பெரியளவு குறைந்ததுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் தங்கைக்கு ஆய்வக உதவியாளர் பணி கிடைத்தது. கூடுதல் மன மகிழ்ச்சியை தந்தது!!

புத்தக வாசிப்பில், நினைவில் வருவமளவிற்கு பெரிய பட்டியல் இல்லை. எமோஷனல் இண்டலெஜிண்ட், இந்திய ஞானம், கெளதம சித்தார்த்தனின் சில நூல்கள் என்ற சில மட்டுமே நினைவில் வருகிறது. படிக்க ஆரம்பித்து, பாதியில் நிற்பவை பல!!! இன்னும் வாசிப்பை கூட்ட வேண்டும்புத்தக வாசிப்பை தாண்டி, பொது வெளியில் வாசிப்பை அதிகமானால், புத்தக வாசிப்பு குறைந்துள்ளது!!!!

ஆண்டின் மத்தியில், மருத்துவ தேர்வு வாரியத்தின் மருத்துவ அலுவலர் தேர்வுக்காக, சுமார் 18 வினா-விடை தொகுப்பை எடுத்து தந்தேன்!! பல மருத்துவர்களுக்கு உதவி இருக்கும் என்று எண்ணுகிறேன்!!!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின், group II A மற்றும் group IV ஆகிய இரு தேர்வுகளுக்காக இலவச வகுப்புகள் நடத்தினோம்!! அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரு பாடங்களை எடுத்தேன்/ எடுத்து கொண்டிருக்கிறேன். இதுவும் மிகவும் மன நிறைவு தருகிறது. வார இறுதி விடுமுறை நாட்கள், பெரும்பாலும், இப்படியாகவே கழிகிறது!!!

தமிழ்நாடு அரசின் நிர்வாக துறை சார்ந்த நிறைய தகவல்களை கற்று வருகிறேன். திரைப்படங்கள் பார்த்து மாதங்கள் கூட ஆகிவிட்டது. முகநூல் மற்றும் கட்செவி பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்!!!

நண்பர்கள் குருமணிகண்டன் மற்றும் வித்யாபதி திருமணத்தினை தாண்டி, வெளி பயணங்கள் செல்லவில்லை. சுனில் அண்ணனின் தாத்தா நூற்றாண்டு விழாவிற்கு செல்லவும் வாய்ப்பு கிட்டியது!!! சென்னைக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், இரண்டு ஆண்டுகளாக கிடப்பிலேயே இருக்கிறது!!!

புகைப்படம் சார்ந்த ஆர்வம் அதிகமாகி இருக்கிறது!! அதில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும்!!! ஒவிய தாகத்தை இன்னும் தொடங்கவே யில்லை!!! தமிழ் எழுத்து நடையில் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக எண்ணுகிறேன்

வெளியுலகத்தின் பார்வையில் வெற்றியின் குறியீடாக இருக்கும் எதுவும், என்னுடைய கால பெட்டகத்தில் இருக்காது!!! என்னுடைய தேடல் வெளியுலகம் சார்ந்தல்ல!! அக புரிதல் நோக்கியே பயணித்து கொண்டிருக்கிறேன்!!! 2017 ஆம் ஆண்டில், அகம் சார்ந்த புரிதலில் சற்று தன்னிறைவை அடைந்தாகவே உணர்கிறேன்!!!

வெற்றிகளை விட தோல்விகளே, என்னை அர்த்த படுத்துவதாக எண்ணுகிறேன்!!! அடுத்த வருடம் குறித்து, எந்த திட்டமும் இல்லை. பார்க்கலாம்!!! என்ன நடக்க போகிறது என்று!!!

அனைவரும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment