எனக்கு
புனைவுகள் மீது நம்பிக்கை எப்போதும்
இருந்ததில்லை. ஆதலால், சிறுகதைகளுக்கும் பெரும்
நாவல்களுக்கும், எனக்கு வெகு தூரம்!!!!
ஆனால், வாழ்க்கையை அழகாக்க பல புனைவுகள்
தேவைப்படுகிறது என்பதே நிதர்சனம்!!!
அதில் காதலும் திருமணமும் முக்கியம்
என்பேன்!!! மனிதன் வாழ்க்கையில், பல
விதமான வாழ்வியல் நடைமுறைகளை கடந்தே வருகிறான். அதில்
ஒன்று தான், காதலும் கல்யாணமும்!!!
இதை, தினசரி செய்கைகளில் ஒன்றாக
நினைத்து கடந்தால், ஒன்றும் பிரச்சனையிருக்காது. காதல்
மற்றும் திருமணம் சார்ந்த சமூக புனைவு,
அதனை சிக்கலாக்கி விடுகிறது. இதனை சார்ந்த வணிகமும்,
அதீத புனைவையே விரும்புகிறது.
காதல் சார்ந்த புனைவு இல்லையென்றால்,
இன்றைய திரைப்பட வளர்ச்சியும் கவிதை தொகுப்புகளும் இல்லாமல்
இருந்திருக்கும். திருமணம் சார்ந்த புனைவு இல்லாமல்
இருந்திருந்தால், அதனை சார்ந்த வணிகமும்,
ஜோதிடமும், திருமண அமைப்பாளர் முறை
வளர்ந்திருக்காது….
ஆனால்,
மேற்கண்ட புனைவு இல்லாமல் இருந்திருந்தால்,
வாழ்க்கை ரசத்தை சுவைத்திருக்க முடியாது
என்பதும் உண்மை!!!
புனைவுகள்
தான், வாழ்க்கையை அழகாக்கின்றன. அந்த புனைவுகளே அதிகமாகும்
போது, வாழ்க்கையை சிக்கலாகி விடுகின்றன. எதிர்ப்பார்ப்புகளை அதிகமாக்கி, காதலையும் திருமணைத்தையும் கேலி கூத்தாக்கி விடுகின்றன.
இரத்தத்தில்
சர்க்கரை இருக்க வேண்டியது அவசியம்
தான்!!! ஆனால், இன்றைய அதீத
புனைவு சார்ந்த புரிதல், இரத்த
சர்க்கரை அளவை அதிகமாக்கி, வாழ்வியலையும்
சமூகத்தையும் சிக்கலாக்கி விடுகிறது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment