Thursday, June 1, 2017

மதங்களும், சில விவாதங்களும்- புத்தக விமர்சனம்

தருமி அவர்கள் எழுதிய, “மதங்களும், சில விவாதங்களும்படித்தேன். மதம்/ இறைவன் என்ற கோட்பாட்டினை நோக்கி கேள்வியை முன்னிறுத்த கூடிய கட்டுரைகளின் தொகுப்பு.

பிறப்பால் கிருத்துவராக இருந்தாலும், மத கோட்பாடுகளின் மீது ஏற்பட்ட சாதாரண கேள்விகளால், பல்வேறு படிநிலைகளை கடந்துஇன்று நாத்திகராக மாறி விட்டார். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னுடைய மனதில் கேள்விகளுக்கு விடை தேடிய பயணத்தின் வடிகாலாகவே, இந்நூலை வடித்திருக்கிறார்.

தான் எப்படி?? “ மதத்திலிருந்து வெளியே வந்தேன் எனபதை, முதல் பகுதியில் விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்களின் சில கட்டுரைகளை, இரண்டாவது பகுதியில் இணைந்துள்ளார் .மூன்றாவது பாகத்தில், இந்து, கிருத்துவம் மற்றும் மூஸ்ஸிம் மதங்கள் நோக்கிய கேள்வி கணைகளை முன்னெடுக்கிறார்.

இது முற்று பெற்ற நூலாக தெரியவில்லையென்றாலும், மதம் குறித்த மாற்று தேடலில்நல்ல நூலாகவே காண்கிறேன்.

மறுவாசிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகம்!!

----------------------------------------------------------------------------------------

எனக்கும்…. இந்து மதம் குறித்த நிறைய கேள்விகள், நித்தம் பாடாய் படுத்துகின்றன. தருமி அவர்களின் புரிதலும், என்னுடைய மனவோட்டத்திற்கு ஒத்திருப்பதாகவே எண்ணுகிறேன். என்னுடைய தேடுதலுக்கு இந்து, கிருத்துவம் மற்றும் மூஸ்ஸிம், பெளத்தம், சமண மதம் மற்றும் நாத்திகம் குறித்த புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்துங்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment