உயிரினங்களில்
இடம் பெயர்வு என்பது இயற்கையானது.
பறவைகள் வலசை போவதும், மீன்கள்
நிரோட்டத்திற்கு ஏற்ப மாறுவதும், காட்டு
விலங்குகள் உணவை தேடி, ஒரு
இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
வழக்கம்!!!
மனிதன்.....
பரிணாம வளர்ச்சி படிநிலையில், உச்சமாக இருக்கிறான். அதோடு
மட்டுமில்லாமல் பகுத்தறிவையும், சிறிதும் பெற்று விட்டான். ஆதலால்....
வெகு காலத்திற்கு முன்பே, உணவிற்காகவும் உறைவிடத்திற்காகவும்
இடப்பெயர்வை தவிர்த்து, ஒரிடத்தில் நிலைய தங்க ஆரம்பித்து
விட்டான்!!!!
இவ்வாறு
புதிய வளர்ச்சி நிலையினை... நாம் நாகரீக வளர்ச்சி
என்று கூறுகிறோம். அவ்வளவு தான்!!!
மரபணு கூற்றப்படி.... ஆப்பிரிக்கா கண்டத்தில் முதன்முதலில் மனிதன் தோன்றி இருக்கலாம்
என்கிறது அறிவியல் உலகம்!!! அவ்விடத்திலிருந்தே... உலகம் முழுவதும் மக்கள்
பரவி இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு!!!
(இதிலும் பிற்காலத்தில் மாற்று கருத்துகள் வரலாம்).
அவ்வாறு
இருக்கையில், தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் தமிழ்நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று
அறுதியுட்டு கூற முடியாது.
ஆரியம்,
திராவிடம் என்ற கருத்துகள் வைத்து
சண்டை போட முடியுமே தவிர....
எந்தவொரு காலத்தில் தெளிவான முடிவு வருவது
என்பது மிக கடினமான நிகழ்வே!!!
அதை வைத்து அரசியல் செய்வது
மட்டும் சாத்தியம்!!!
இன்றைய
நிலையில், சென்னையில் வாசிக்கும் பல லெட்சம் மக்கள்
வெளிமாவட்டத்தினையே சேர்ந்தவர்களே!!! இன்னும் 5 தலைமுறைகள் செல்லுகையில், அவர்கள் அனைவரும் சென்னை
வாசிகளாகவே அறியப்படுவர். அதாவது 100-150 வருடங்களின் உங்களின் பூர்விகம் மண்ணே... எளிதில் மறக்கடிப்படும் நிலை
வந்து விடும்!!!
அப்படியிருக்கையில்
2000-3000 வருடங்களுக்கு முன்னால் நடந்ததை...... பூர்விகத்தை தேடுவது எவ்வகையில் சாத்தியமோ???
கார்பன்
வயதுகணிப்பு, கீழடி, பூம்புகார் போன்று
பல இடங்களில் ஆய்வு செய்வதன் மூலம்,
பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்வதன் மூலம்,
சங்க கால நூல்களை ஆய்வின்
மூலம் மரபணு ஜீன்களை ஆய்வதன்
மூலம்..... பூர்விகத்தை யூகிக்க முடியுமே தவிர....
அறுதியிட்டு கூற இயலாது.
முதலில்
..நம்முடைய.. முந்திய 5 -10 தலைமுறைகளை தோண்டி எடுக்க முயலுங்கள்!!!
அதுவே, நம்முடைய வரலாற்றையாவது தெரிந்து கொள்ள இயலும்!!! அதை
விட்டு ................
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment