”……….. இவர் ஆட்சியை
பிடித்தால், இந்தியா/தமிழ்நாடு வல்லரசு/நல்லரசாக மாறி விடும்………..”
”
அரசாங்க வேலை கிடைச்சா, வாழ்க்கை இனிமையாகி விடும்….”
“
இந்த டிகிரி படிச்சா……
வேலை கன்பார்ம்……”
“
இந்த கோட்சிங் செண்டர் ல படிச்சா….. வேலை கிடைச்சுடும்….. “
“
இதுமாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கை சுபிஷ்மாக மாறி விடும்….”
“
இந்த ஸ்கூல படிச்சா…
ஸ்டேட் பர்ஸ்ட் வந்திடலாம்….”
“
இந்த மருந்த சாப்பிட்டா, எல்லா நோய்களும் குணமாகி விடும்…”
இப்படியாக பட்டியல்
நீண்டு செல்லும்….
மேற்கண்ட அனைத்தும்
புரிதல்களும் படு அபத்தமானவை. ஒரு பிரச்சனை குறித்து, தெளிவான புரிதல் இல்லாதவர்களே
!!!!!….. இது மாதிரி மையப்படுத்தப்பட்ட, ஒற்றை தீர்வை நோக்கி பயணிப்பவர்கள்.
எந்த பிரச்சனைக்கும்
ஒற்றை காரணி காரணமாக இருக்காது; பல்வேறு காரணிகளால் ஆக்கப்பட்டதே பிரச்சனைகள். ஒற்றை
காரணி பிரச்சனையாக இருந்தால், ஒற்றை தீர்வு விடையாக அமையும். அதனால், பின்நவீத்துவ
ரீதியிலான பன்மைப்படுத்தப்பட்ட தீர்வுகளே விடையாக இருக்க முடியும்.
மேற்கண்டவற்றில்
எடுத்துகாட்டாக…
////“ இந்த கோட்சிங் செண்டர் ல படிச்சா….. வேலை கிடைச்சுடும்….. “////
ஒரு கோட்சிங் செண்டரின்
பணி என்பது பாடம் குறித்த புரிதலை ஏற்படுத்துவது, தேர்வை பயமில்லமால் அணுக மாதிரி தேர்வுகளை
வைப்பது மற்றும் பாட குறிப்புகளை அளிப்பதும் ஆகும்.
மேற்கண்ட அனைத்தும்
பயிற்சி நிறுவனம் அளித்து விட்டால் மட்டும் போதுமா???? அம்மாணவன் படிக்க வேண்டுடாமா???
ஒருவன் தேர்வில்
வெற்றி பெறுவதற்கு, பயிற்சி நிறுவனத்தின் பங்கு 50 சதவீதம் என்றால், மீதி 50 சதவீதம்
பங்கு மாணவனை சேரும். இதில் இல்லாமல், தேர்வின் கடின தன்மை, தேர்வை பயம் இல்லாமல் அணுகுதல்,
உளவியல் அழுத்தம், வாழ்க்கையை பற்றிய பயம் என பல்வகை காரணிகள் தேர்வின் வெற்றியை தீர்மானிக்கின்றன.
ஏன்…
மற்ற கோட்சிங் செண்டர் சென்றவர்கள் வெற்றி பெறவில்லையா???
---------------------------------------------------------------------------------------------
இது மாதிரியே… .50/100 ஆண்டுகளுக்கு
முன்னர் வைக்கப்பட்ட தீர்வு வழிமுறைகள், இன்றைக்கு பொருந்த கூடியவை என்று வாதிடவதும்
அபத்தமானது. அம்பேத்கர், காந்தி, ஸ்டாலின் மற்றும் காந்தி என பல தலைவர்கள் முன் வைத்த
கருத்துகள் பெரும்பாலும் ,சூழ்நிலையை பொறுத்தது…. அக்கருத்துகள் 1000 ஆண்டுகள் கடந்தாலும்
சிறந்தவை என வாதிடவதும் தவறு!!
அப்போது இருந்த
பிரச்சனைகலின் தன்மைகள் வெவ்வேறானவை. அதே பிரச்சனை… இன்று தொடர்ந்தாலும், காரணிகள் வெவ்வேறானவை.
அதை விடுத்து…
எல்லாவற்றிற்கு சர்வரோக நிவராணி என்பது எத்தகைய புரிதலோ!!!!
காரணத்தை ஆராயமால்,
பொத்தாம் பொதுவாக எப்பிரச்சனையும் தீர்க்க இயலாது. இவ்வாறு மையப்படுத்த நவீனத்துவம்
தீர்வை விடுத்து, பன்மைப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவத்தினால் விடையை தேடுவோம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment