Friday, March 23, 2018

சமூக அங்கிகாரமும் ,முன் அனுபவமும்


நண்பர் ஒருவரோடு தொலைபேசியில் பேசி கொண்டிருந்தேன். அதன் மையம், சமூகத்தில் ஒருவனை ஆங்கிகாரம் செய்தல் குறித்து வந்தது.

இச்சமூகத்தில், ஒவ்வொருவனுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கிறதா? என்ற கேள்வி கேட்டால், நிச்சயமாகஇல்லை என்ற பதிலேபெரும்பாலும் திரும்ப வரும்!!!!

ஒரு துறையில் இளங்கலை முடித்து, அதே துறையை சார்ந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணபிக்கும் போது, முன் அனுபவம் உள்ளதா? என்று கேட்பார்கள். அதிலும் படிப்போடு, pratical உள்ள துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும்,....... இந்நிலையே தொடர்கிறது.

இவ்வாறாக, ஒரு கல்வி பயிலும் துறையில் உள்ள பிரச்சனையை, ஒரு தனிமனிதனின் பிரச்சனையாக சமூகம் மாற்றி விடுகிறது.

வாய்ப்பு கொடுக்கும் போது, ஒருவனின் திறமையை அறிய முடியும். ஆதலால் தான், பல தொழிற்துறை நிறுவனங்களில் apprenticeship என்ற பயிற்சியை வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு கோணத்தில் யோசித்து பாத்தால்..... தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கும் முன் அனுபவத்தில் தவறென்று இல்லை என்றே தோன்றுகிறேன்.

சுய அறிவற்ற, சமயோசித புத்தியற்ற, படித்ததை வாந்தியெடுக்கும் மாணவனை, பட்டப்படிப்பு படித்து விட்டான் என்பதற்காக, ஒருவனை தகுதியானவனாக, தனியார் நிறுவனம் எப்படி ஏற்று கொள்ளும்.

எது எப்படியோ....... ஒருவனை திறமையானவன் என்ற அங்கிகாரம் செய்வதில், பொதுசமூகமும், தனிமனித திறமையும் முக்கியாமானவை. இரண்டும் அறமற்ற நிற்கையில், திறமையானவன் புறக்கணிப்படுவதில் ஆச்சரியமில்லை: திறமையற்றவன் கொண்டாடப்படுவதில் ஆச்சரியமும் பட தேவையில்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment