தேர்தலோ/இடைத்தேர்தலோ முடிந்து ,வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட்டவுடன் வரும் முதல் வார்த்தை......
வோட்டிங் மிஷனை பற்றி தான்!!!
தேர்தலில்
தோற்ற.... ஒவ்வொரு கட்சியும், வோட்டிங்
மிஷனில் நடந்த தில்லுமுல்லு வேலைகளினால்
தோற்றோம் என்று அறிக்கை வெளியீடுவது
வழக்கம்!!!!
அரசியல்
கட்சிகள் தான், இவ்வறிக்கைகள் மூலம்,
தன்னை நியாயப்படுத்தி கொள்ள முயற்சி செய்கின்றன.
சமூக நல ஆர்வலர்களும், எழுத்தாளர்களும்,
அறிவியலாளர்களும்... இதே கருத்தை முன்
வைப்பதே ஆச்சரியமாக உள்ளது.
வோட்டிங்
மிஷினில்..... தில்லு முல்லு வேலைகளை
, நீருபணம் செய்யுங்கள் என்று அறை கூவல்
இட்ட போது, யாரும் முன்வரவில்லை.
தில்லுமுல்லு
வேலைகளுக்கு வாய்ப்புள்ளது என்று சில அறிவியலாளர்கள்
சொன்னாலும், அதை முழுமையாக செயல்படுத்தி,
வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா? என்றால்
கிடையாது என்று தோன்றுகிறது.
இது மாதிரியான செய்திகளை கடக்கும் போது, உதட்டில் வரும்
புன்னைகையோடு கடந்து விடுவது, என்னை
போன்ற முட்டாள்களுக்கு நல்லது!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment