Friday, January 26, 2018

இன்றைய பொருளாதார சூழ்நிலை


தேசிய பங்கு சந்தையான நிப்டி 11,000 புள்ளிகளையும், மும்பை பங்கு சந்தை 36,000 புள்ளிகளை கடந்து நிற்கிறது. சின்ன சின்ன சரிவுகளை சந்தித்தாலும், மெதுவாக, பங்கு சந்தை புள்ளிகள் அதிகரித்து வருகின்றன. கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான்!!!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மீது முதலிட்டாளர்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதே!!!! இதற்கு ஏற்ப உலக பன்னாட்டு நிதியம், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்பதே உண்மை.

உலக பொருளாதார நிலைமை மந்தமாகவே இருக்கிறது. இந்தியாவிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மந்த நிலைமை போக்க,நிதி முதலீடு அவசியம் என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன்.

ஏற்கனவே வரா கடன்களினால் பாதிக்கப்பட்ட வங்கிகள், மீண்டும் கடளிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனை குறைந்தபட்சமாக ஈடுகட்ட, மத்திய அரசும் ஒன்றரை லட்ச கோடிகளை வங்கிகளுக்கு அளித்துள்ளது. மேலும் பொது துறை நிறுவனங்களுக்கு பண உதவி அளித்துள்ளது.

பொருளாதார மந்த நிலையால், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. அதிக மனித ஆற்றல் கொண்ட இந்தியாவில், வேலையில்லா திண்டாட்டம் மோசமாக விளைவுகளை ஏற்படுத்தவே வாய்ப்பு உள்ளது.

பொருளாதார மந்தமும், பண முதலீடு இல்லாத நிலையால், வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.

ஏற்றுமதி குறைவு, கச்சா பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பு, பண முதலீடு குறைவு, அமெரிக்காவின் பொருளாதார நடவெடிக்கைகள், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு என பல பிரச்சனைகள் உள்ளன. உலகமாயமாக்கலுக்கு பிறகு, இப்பிரச்சனைகளுக்கு தவிர்க்க முடியாது என்பதும் உண்மை!!!

பணவீக்கமும், சற்று அதிகரிப்பது போல் தோன்றினால், கட்டுக்குள்ளே இருக்கிறது. நடப்பு கணக்கு பற்றா குறையும், வருவாய்- செலவு இடைவெளியும் கட்டுக்குள் இருப்பதால், எதிர்காலத்தில் சீரடையும் என்று நம்புவோம்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment