பிக்
பாஸ் நிகழ்ச்சியிலிருந்து புரிந்து கொள்ள கூடிய/கற்று
கொள்ள கூடிய செய்திகள் ஏராளம்.
அதிலிருந்து நாம் எதை எடுத்து
கொள்கிறோம். எதை நீக்க விரும்புகிறோம்
என்பது தனிப்பட்ட மனிதனின் புரிதல் நிலையை பொறுத்தது!!!!
பிக்பாஸ்
நிகழ்ச்சியின் வெற்றியின் அஸ்திவாரமே…. அதன் பிரச்சனைகளே!!! நிகழ்ச்சியில்
உள்ளவர்களின் பிரச்சனையாக இருந்தாலும் சரி…. அல்லது நிகழ்ச்சியை
வழி நடத்துகிற கமல்ஹாசன் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும்
சரி……….
மொத்த
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு- பரணி
என்ற பிரச்சனையை தாண்டி, மற்றவையெல்லாம் பெண்
சார்ந்த பிரச்சனைகளாகவே அமைகின்றன அல்லது முன்னிறுத்தப்படுகின்றன . அதாவது ஜீலி,
ஆர்த்தி, காயத்ரி, ஆர்த்தி, நமிதா போன்ற பெண்
சார்ந்த போட்டியாளர்கள் சார்ந்த பிரச்சனைகளே அதிகமாக
இருக்கின்றன.
இதற்கு
இரண்டு காரணங்கள் இருக்கலாம். இந்நிகழ்ச்சிக்கு பெண் வாசகர்களை அதிகமாக்கி
விரும்பி பெண்களுக்கு இடையே பிரச்சனையை உண்டாக்க,
இயக்குநர் முடிவு செய்திருக்கலாம். மற்றொன்று….
பெண்களுக்கு இடையே சண்டை எளிதாக
உண்டாகும். அதாவது ஆண்களுக்கு இடையே
சகப்பு தன்மை அதிகமாக இருக்கும்.
ஆனால், பெண்களுக்கு சகிப்பு தன்மை என்பது
மிக குறைவு.
ஒரே
இடத்தில் கூடி வாழுதலே, இந்நிகழ்ச்சியின்
மையப்புள்ளி. அவ்வாறு கூடி வாழுதல்
என்பது பெண்களுக்கு இயலாத காரியம். (இதில்
பல மாற்று கருத்துகள் இருக்கலாம்).
சக
பெண்களுக்கு இடையே சகிப்பு தன்மை
குறைவு என்பது சமகாலத்தில் மிக
அதிகமாக இருக்கிறது. பழங்காலங்களில், இத்தகைய பிரச்சனைகள் இருந்ததா??
என்று தெரியவில்லை. மாமியார்-மருமகள் பிரச்சனை, மருமகள்-
நாத்தனார் போன்ற பிரச்சனைகளும், இதன்
வேறு வடிவங்களாக கூட இருக்கலாம். காரணம்
தான் விளங்க இயலவில்லை!!!!
பல
நூற்றாண்டுகளாக ஆண் சமூகம் பொருளீட்டல்
சார்ந்தும், பெண் சமூகம் குடும்பத்தை
வழி நடத்துவதுமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், பெண்
ஹார்மோன், ஒவ்வொரு விஷயத்தையும் உணர்ச்சி
பூர்வமாக அணுக வைக்க கூடியது.
ஆண் ஹார்மோன் அறிவு சார்ந்து அணுக
கூடியது. (இதில் மாற்று கருத்தும்
உண்டு).
அவ்வாறு
பெண் குடும்பத்திற்குள்ளே மட்டுமே இருப்பதனால், உறவு
சார்ந்த சிக்கல்களே அதிகமாக இருந்தது. உறவு
சார்ந்த சிக்கல்களில், எது சரி/எது
தவறு என்பதை…….. எப்போது அறுதியிட்டு சொல்ல
இயலாது. மாறாக, ஆண் உறவு
சார்ந்த சிக்கல்களில் சிக்கி கொள்ள விரும்பவது
இல்லை. பெண்ணுக்கே குடும்பமே வாழிடமாக இருப்பதால், உறவு சார்ந்த சிக்கலகளில்,
அவளையறியாமல் சிக்கி கொள்கிறாள். சக
பெண்ணும், இந்த மனநிலையில் இருக்கும்
போது, பிரச்சனைகள் மட்டுமே தொக்கி நிற்கிறது,
ஆனால்,
வருங்காலங்களில் பெண்களுக்கு கல்வியறிவும் வெளியுலக வாய்ப்புகளும் அதிகமாகி வருவதால், பெண்கள் இச்சூழ்நிலையிலையை, எளிதாக
எதிர் கொள்வார்கள் என்று நம்புவோம்!!!!
பின்குறிப்பு
: பெண் சமூகத்தின் மீதான குற்றசாட்டாக, நான்
வைக்க விரும்பவில்லை. சமகால பிரச்சனைகளை யோசிக்கும்
போது, பிக்பாஸின் பிரச்சனை கூறுகளும், சமகால பிரச்சனை கூறுகள்
ஒத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதில் என்னுடைய புரிதலை
முன் வைத்தேன். மாற்று கருத்துகள் இருப்பின்,
முழு மனதோடு ஏற்று கொள்கிறேன்.
உங்களில்
ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை
குமார்
No comments:
Post a Comment