Thursday, July 20, 2017

அரசியலும் பங்களிப்பும்


அரசியல் என்ற வார்த்தையை கேள்விபாடாதவர்/பயன்படுத்தாதவர் எவரும் இலர்!!!! இப்பூலகில் அனுதினும் ஒலிக்கும் சொற்களில் முக்கியமானது. ஆனால், இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை எந்தளவிற்கு புரிதலோடு இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய கேள்வி குறி!!!!

அரசியல் என்றாலே, அரசியல் கட்சி ஆரம்பித்து நேரடியாக மக்களோடு மக்களாக பயணிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். இது தவறான புரிதல் என்பேன்!!!

நேரடியாக அரசியல் கட்சி மூலம், மக்களுக்கு சேவை செய்வது ஒரு வகை என்றால், மறைமுக அரசியல் என்பதும் விசாலமானதே!!!!

அது ஒரு தனிமனிதனாக இருக்கலாம்/ சங்கமாக இருக்கலாம்/ அமைப்பாக இருக்கலாம்/ தத்துவர்ந்த கொள்கையாக இருக்கலாம்.

ஒரு குடிமகன் குடிதண்ணீருக்காக அரசிற்கு, ஒரு மனு எழுதுவதாக இருக்கலாம். அல்லது 100 பேர் சேர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியலாக இருக்கலாம். மேற்கண்ட இரண்டுமே ஒருவகையான அரசியலே!!!!

சாதி, இனம், மொழி, இனம் மற்றும் சாதியற்ற சமூக கட்டமைப்புக்காக போராடுவது ஒரு வகையான அரசியல் அழுத்தமே!!!! எடுத்து காட்டாக, தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியே வந்துள்ளது.

அரசியல் சார்புள்ள/சார்பற்ற சங்கங்கள் என்று நிறைய உள்ளன. எடுத்து காட்டாக அரசு ஊழியர்கள்/அலுவலர்கள் சங்கம்/ஆசிரியங்கள் போன்றவை. மேலும் கூட்டுறவு சங்களும் மக்கள் பணியை செய்து வருகின்றன.

இதை தாண்டி, பெரும்வணிகர்கள் செய்யும் மறைமுக அரசியல் தந்திரம் ஊரறிந்த உண்மை!!!!

அரசியல் கட்சிகள் என்பது ஆட்சி கட்டிலில் உட்கார்ந்து மக்களுக்கு நல்லது செய்வதென்றால், மேற்கண்ட அமைப்புகள் நேரடியாக ஆட்சி கட்டிலில் அமராமல், மக்களுக்கு சேவை செய்பவை. மேற்கண்ட அனைத்தும் மக்களுக்கு நேர் மறையான விளைவுகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை;சில அமைப்புகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்!!!!

ஒரு தனிமனிதனோ/அமைப்போ தன்னுடைய தேவை சார்ந்து சலுகை பெறுவதற்காக போராடுவதில், அரசியல் கலந்து இருக்கிறது.

(மேற்கண்டதில் நன்கு புரிதல் உள்ளவர்களுக்கு, ”ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்என்று கேள்வி கேட்க மாட்டர்கள் என நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வந்து பல வருடங்கள் ஆயிற்று!!!! )

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment