இன்றைய
நவநாகரீக உலகில், ஹோட்டலுக்கு செல்லாதவர்கள்
யாரும் இருக்க முடியாது. அது
ரோட்டோற கடையா?? பைவ் ஸ்டார்
ஹோட்டலா?? அல்லது நடுத்தர ஹோட்டலா??
என்பதே வித்தியாசம். வேலை நிமித்தமாக நகரத்தில்
பணிபுரிவர்கள், கல்லூரி மாணவர், சுற்றுலா
செல்பவர்கள், அதிகாரத்திற்காக ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் என பட்டியல் நீண்டு
கொண்டே செல்லும்.
செல்லும்
ஹோட்டலின் தன்மை, பணத்தினை கொண்டே
தீர்மானிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
ஏழை தொழிலாளி ரோட்டோற கடையில் சாப்பிடுவதும்,
கொஞ்சம் வசதியானவர் நடுத்தர ஹோட்டலுக்கு செல்வதும்
வழக்கம். அப்படி சென்றாலும், எவ்வகையான
உணவை சாப்பிடுவது என்பது பணத்தை பொறுத்தே
தீர்மானிக்கப்படுகிறது. அதனை தாண்டிய இன்னொரு
விஷயமும் இருக்கிறது.
அதாவது,
கடையில் உள்ள ஒர் குறிப்பிட்ட
உணவை பார்த்து, அந்த உணவையே உண்ண
வேண்டும் என்ற தன்னிச்சையாக எண்ணம்
(விருப்பம்)!!!! பணம் குறைவாக போது
குஸ்கா சாப்பிடலாம் என்று எண்ணி கடைக்கு
செல்வோம். ஆனால், சிக்கன் பீஸை
பார்த்தவுடன் கடன் வாங்கியாவது பிரியாணி
சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்.
உணவின்
வாசனையை நுகர்வது மூக்காக இருந்தாலும், அதன்
சுவையை உணர்வது நாக்காக இருந்தாலும்,
உணவை தேர்வுச் செய்வதில் கண்ணின் பங்கே முதன்மையானது.
இதை அறிவியலும் ஒத்து கொள்கிறது.
இதனால்
தான், நடுத்தர கடைகளில், உணவு
தயாரிக்கும் முறை கொஞ்சம் வெளிப்படையாகவே
நடக்கும். புரோட்டா போடுவது, சிக்கன் ரைஸ் செய்வது,
பிரியாணியை கடையின் வெளிப்பகுதியில் வைத்து
விற்பனை செய்வது, முட்டை புரோட்டா போடுவது
என்ற பல்வகையான உணவு தயாரிப்பு முறைகளை,
வாடிக்கையாளர்களின் பார்வைப் படும் படியாக செய்கின்றனர்.
இதில் இருவகையான நன்மைகள் இருக்கின்றன. ஒன்று….
மேற்சொன்னவாறு பார்வையாளர்களை
ஈர்ப்பது. மற்றொன்று….. நாங்கள் வெளிப்படையாக உணவு
தயாரிக்கிறோம் என்ற உத்திரவாதம். இதை
தாண்டி கடையில் இடப்பரப்பு பத்தாது
என்பது வேறு கதை!!!
இதே வழிமுறையை…. பெரிய உணவகங்கள் வேறு
மாதிரியாக கையாளுகின்ற்ன. பார்த்தவுடன் ஈர்க்கும் வண்ண உணவு புகைப்படங்கள்,
மெல்லிய இசை போன்றவற்றை பயன்படுத்துகின்றன.
சில உயர்ந்த உணவகங்கள், உணவு
சமைப்பதை கண்ணாடியின் காணும் அளவிற்கும் வெளிப்படையாகவும்
செய்கின்றன. சில உணவகங்களில், கிரில்லுடு
சிக்கனை வெளியே வைத்திருப்பார்கள்.
மேற்கண்ட
அனைத்துமே… அந்த நொடி பொழுதில்
பணத்தை பற்றி கவலைப்படாமல், உணவு
ருசிக்க வைக்க வேண்டும் என்ற
எண்ணமே!! அந்த உணர்ச்சி வேகத்தில்…..
வாடிக்கையாளர்களாகிய நாம் பெரும்பாலும் அகப்பட்டே
கொள்கிறோம்!!!
இவையெல்லாம்
சரியா?? தவறா?? என்ற விவாதத்திற்கு
செல்ல விரும்பவில்லை. அந்த நொடி பொழுதில்…
அத்தகைய உணவு, நம்முடைய மனதில்
களிப்பை ஏற்படுத்தினால் போதும் !!!! எல்லாம் ஒர் சாண்
வயிற்றுக்கு தானே!!!!
.உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:
Post a Comment