Tuesday, November 22, 2016

காத்திருத்தல்- நல்லது/கெட்டது

ஒரு நல்ல விஷயத்திற்காக, காத்திருக்கும் போது..... அந்த நல்ல நாளை எண்ணி உள களிப்போடு காத்திருப்போம். ஆனால்... அந்த நல்ல நாள் வந்துவிட்டால்... அந்த மனக்களிப்பின் அளவு குறைந்து விடும். திருமண நாளை எதிர்பார்ப்பில் தான் மகிழ்ச்சியே தவிர!!! திருமண நாளான்று குறைந்தும் விடலாம்.

அது போல்... கெட்ட விஷயத்திற்கும் நடக்கும். கெட்ட காரியம் நடைபெறும் நாள் வரை, மிகவும் வருத்தத்தோடு இருப்போம்!!! அந்த நாளை கடந்து விட்டால், மனம் இலகுவாகி விடும். ஒரு நோயிற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிருப்பின், ஆபரேசன் தியேட்டர் போகும் வரை பயமிருக்கும். ஆனால், உள்ளே சென்று விட்டால், பயம் குறையலாம்.

மேற்கண்ட சந்தோஷம்/துக்கம் ஆகிய இரு நிகழ்வுகளிலும், காத்திருந்த நாட்களிலேயே மகிழ்ச்சியும் வருத்தமும் அதிகமாக இருக்கும். ஆனால், அதை அடைந்து விட்டால் குறைந்து விடும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment