Wednesday, June 8, 2016

மனிதம்-பிரச்சனைகள்

கீழ்க்கண்ட இரண்டில், ஏதேனும் ஒன்றிலே பெரும்பலான மனிதர்கள் இருக்கிறார்கள்...
1. பிரச்சனையை புரிந்து கொள்ளாதவர்கள்/ கொள்ள முடியாதவர்கள்- ஒரு பிரச்சனையின் மூல காரணத்தை அறியமுடியாததால், தீர்க்க இயலாதவர்கள்.
2. பிரச்சனையின் காரணத்தை அறிந்தவர்கள்- ஒரு பிரச்சனையின் மூலக்காரணத்தை நன்கு அறிந்தவர்கள். அதனை தீர்க்கும் வழிமுறையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால், பிரச்சனையை தீர்க்காமலே, வாழ்பவர்கள்.
இன்றைய நிலையில் முதல் நிலையினரே அதிகம். ஆனால், இவர்கள் சமூகம் முன்னேறும் போது, பிரச்சனையும் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
இரண்டாவது வகையினர், சமூக முன்னேற்றத்திற்கு ஏற்ப, இவர்களும் அதிகமாகி வருகின்றனர். இவர்களே சமூகத்திற்கு பிரச்சனைகளாக மாறி வருகின்றனர் என்பது நிதர்சனம்.
சமூகம் முன்னேறும் போது, முதல் வகையினர், இரண்டாவது வகையினராக மாறி விடுவதை தடுக்கவும் முடியவில்லை.... மது போதையை போல்.....
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment