Thursday, June 16, 2016

எவன் பணக்காரன்

ஒருவர் பொருளாதரத்தினால் செல்வந்தவரது, இரண்டு வகையில் நடைபெறும். ஒன்று..... அதிகமான அளவு பொருளீட்டல். மற்றொன்று..... குறைவாக சம்பாதித்தாலும், தேவையான செலவுகளை மட்டுமே(கஞ்ச தனம் செய்வதை சேர்க்க வேண்டாம்) செய்வதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவது ஆகும்.
இன்றைய சூழ்நிலையில், இரண்டாவது வகையான பொருளீட்டலே அதிகமாகி வருகிறது. செலவு செய்யும் முறையில் கவனம் இருப்பதில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தினை உள்வாங்கியதன் பின் விளைவு. சேமிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் போல் சொகுசாக வாழ வேண்டுமேன, தன்னுடைய தகுதிக்கு அதிகமாக செலவு செய்ய ஆரம்பித்து விட்டோம்.
முற்காலத்தில், இதற்கு நேர் எதிரான மனநிலையே இருந்தது. பெற்ற பொருளாதாரத்தை, தேவையான அளவு செலவு செய்தனர். மற்றவர்கள் போல் பகட்டாக வாழ வேண்டும் என்று எண்ணாவில்லை.(மாறாக கஞ்சத்தன்மை அதிகமாக இருந்தது என்பது வேறு கதை).
இன்றைய நிலையில், தன் தேவையை நிறைவேற்றி கொள்ள,கடன் வாங்குவதை பெருமையாக எண்ண ஆரம்பித்து விட்டோம். அரசாங்கம் முதல் தனி மனிதன் வரை, இந்த வரைமுறைக்கு விதிவிலக்கல்ல.
பணம் படைத்தவர்கள், தன்னுடைய சுய லாபத்திற்காக, கடன் கொடுப்பதை தொழிலாக மாற்றி, அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததன் நீட்சியே!!! இதற்கு உலக நாடுகள் முதல் கூலி வேலை செய்யும் பொதுமக்கள் வரை ஆட்கொள்ளப்பட்டனர்.
கடன் வாங்குவதை முழுவதும் தவறொன்று, நான் சொல்லவில்லை. தேவையற்ற செலவுகளை குறைக்கும் வாழ்க்கை நடைமுறையை கைவிட்டு, தேவையற்ற செலவுக்காக கடன் வாங்குவதையே தவறு என்கிறேன்.
பட்ஜெட் போடும் அமைச்சரை குறை கூறுவதற்கு முன்னர், நம் வீட்டு பட்ஜெட்டை பற்றியும் சற்று யோசியுங்கள்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment