Wednesday, June 15, 2016

திருமண எதிர்பார்ப்புகள் மாறி விட்டதா??

திருமண பந்தத்திற்கான எதிர்பார்ப்புகள், காலத்திற்கேற்ப மாறி வருவதாக தெரிகிறது.
வருங்கால மனையாள் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆணின் மனம், சற்றே மாற்றம் அடைந்துள்ளது. அழகிற்கான முக்கியத்துவம் சற்றே குறைந்து, பொருளாதார முக்கியத்துவம் பெற்றுள்ளது. பணத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, படித்த/வேலைக்கு செல்லும் பெண்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அது போல், பெண்ணின் மனநிலையும் மாறி உள்ளது. பொருளாதாரத்தை முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை மாறி உள்ளது. வருங்கால மணவாளன், தன்னொத்த அழகிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இன்றைய சூழ்நிலையில், பெண்கள் வேலைக்கு செல்வதால், பொருளாதாரத்திற்காக ஆணை எதிர்பார்க்கும் மனநிலையும் மாறி, அழகு முக்கியத்துவம் பெற்று.விட்டது.
மேற்கண்ட இரு வகையான மனமாற்றங்களிலும் எந்தவித தவறும் இல்லை. கால மாற்றத்திற்கு
ஏற்ப, மணமக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்தை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல், எதிர்பாலினத்தின் எதிர்பார்ப்புகளையும், மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், இல்லறம் நல்லறமாக இல்லாமல், துறவறமாக மாறும்!!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment