Saturday, June 25, 2016

சுவாதி கொலையும் மனித மனநிலையும்

சென்னையில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....
இதையெல்லாம் தாண்டி, இன்னொரு விஷயமே மனதிற்கு வலியை தருகிறது. ஒசுரில் பகலிலே கொலை நடந்த போது, கண்டுக்கொள்ளாத சமூகம், இதை மட்டுமே பேரிழப்பாக வருந்துகிறது. அதற்காக சுவாதியின் கொலையை நியாயப்படுத்தவில்லை.
டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் தொல்லையினால் இறக்க போது, சமூகமே பதறியது. அதே சமயத்தில், தமிழ்நாட்டில் ஒர் மூலையில் நடந்த பாலியலில் தொந்தரவினால் இறந்த பெண்ணை கண்டு கொள்ளவில்லை. ஏதோ.... பத்து செய்திகளில், பதினொன்றாக கடந்து விட்டோம்...
சென்னையில் மழை வெள்ளம் வந்த பொது, இதே மனநிலையே இருந்தது. கடலூரின் மழை வெள்ளத்தை, கடைசி வரி செய்தியாக தான் மனதில் நின்றது. அதே சமயத்தில், சென்னை வெள்ளத்தை மட்டும் பார்த்து, வருத்தப்பட்டோம்...
இது என்ன மனித மனநிலையோ!!! புரியவில்லை... மேற்கண்ட அனைத்து சம்பவங்கள் கொடுத்த வலியை மறப்பதற்கில்லை. ஆனால், நகரத்தில் நடந்தால் மட்டும், முக்கியமான நிகழ்வு போலும், கிராமத்தில் நடந்தால், சாதாரணமாக நினைக்கும் மனநிலையே தவறென்கிறேன்.
மேல்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமே, பெரிதாக நினைக்கும் மனநிலையை பிரதிப்பலிக்கிறது. பொருளாதாரத்தினால் அதிகாரத்தினால் சாதியினால் மேல் மக்களின் பிரச்சனைகளை மலையாகவும், கீழ் மக்களின் பிரச்சனைகளை மடுவாகவும் நினைக்கும் மனித தன்மையே வலிக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் வலி என்பது எவராலும் நிரப்ப முடியாத வெற்றிடம். அதை உணார்ந்தவனுக்கு மட்டுமே புரியும். அந்த வலியில் மேல் தட்டு வலி ,கீழ் தட்டு வலி என்ற வேறுபாடெல்லாம் இல்லை.
உணர்வுகளை மதிப்போம்!!!! வலியை பகிர்ந்து கொள்வோம்!!! மாடிவீட்டு சுப்பனுக்கும் நடந்தாலும், குடிசை குப்பனுக்கும் நடந்தாலும் சரி!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment