கடந்த பத்து பதினைந்து நாட்களாக குதி காலில் வலி இருந்தது (மற்றவருக்கு வரும் போது நோயாக மட்டும் தெரிவது, நமக்கு வரும் போது தான், அதன் ஆழம் புரிகிறது). எப்போதாவது உணர்ந்த வலி, ஒரு கட்டத்தில் தொடர்ந்து வலிக்க ஆரம்பித்தது. ஆனால், அந்த வலிக்காக, உள் மருந்துகளோ, வெளிப்பூச்சுகளோ பயன்படுத்தவில்லை.
அதற்குள் குதி கால் வலியா?? என்று மனதிற்கு சிறிய பயத்தை கூட ஏற்படுத்தியது. நான் பல மணி நேரம் நின்று கொண்டு வேலை செய்தது கூட கிடையாது. படிக்கும் போது மட்டும், நடந்து கொண்டே படிப்பதுண்டு (தூக்கத்தை தவிர்க்க) அப்படியிருக்கையில், குதிக்கால் வலிக்கு காரணம் புரியாமல், சில நாட்கள் கடந்தன. எக்ஸ் ரே எடுத்து, குதி காலில் புதிய எலும்பு வளர்ச்சி ஏதாவது இருக்கிறதா?? என்று பார்க்காதது மட்டும் தான் பாக்கி.
நோயாளிகளிடம் கேட்க வேண்டிய, அனைத்து கேள்விகளையும், எனக்குள் நானே கேட்டு கொண்டேன். நோயிற்காக காரணமும், அறிய முடியவில்லை. குதி கால் வலியோடு வந்தவர்களுக்கு, நான் MCR காலணி வாங்கி அணிய சொல்வது வழக்கம்., நான் அணிந்திருக்கும் காலணியும், சிறிதளவு மென்மையாகவே இருந்தது.
சில குழப்பங்களுக்கு பிறகு, நான் அணிந்திருந்த காலணியின் மீது சிறிய சந்தேகம் வந்தது. அந்த காலணி வாங்கி, ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. காலணியின் அடிப்புறம், சற்று உயரமாக(அரை செமீ அளவுக்குள்) இருந்தது. நான் பெரும்பாலும், தட்டையான காலணியையே அணிபவன். ஆனால், இதில் சற்று உயரமான அடிப்பகுதியை பெற்றிருப்பதால், சந்தேக பொறி கிளம்பியது. புதிய காலணி வாங்கி, அணிந்த இரு தினங்களில், கால் வலியோ பறந்து போனது!!! சற்று விசித்திரமான புரிதல்!!! ஆனால் உண்மை.
இந்த நிகழ்வு, புதிய இரு புரிதலை தந்தது.
1. நான் மருத்துவராக, நோயாளிற்கு ஏற்படும் நோய்களை கண்டறிய, மிகவும் நுட்பமாக செயல்பட வேண்டும். இந்த இடத்தில் தான், குடும்ப மருத்துவரின் அவசியம் நன்கு புரிந்தது.
2. அரை செமீ உயரமுள்ள, அடிப்புறம் உடைய காலணிக்கே, இந்த வேதனை என்றால், இன்றைய நவநாகரீக பெண்களின் நிலை தான் என்ன????
நாகரிகம் என்ற பெயரில், நம் உடலுக்கு ஒவ்வாத எத்தனையே செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமான தொன்று ஹைகை கீல் காலணிகள். நாகரிகமென்ற பெயரில் ,நம்மை நோயாளிக்கி கொண்டிருக்கிறோம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment