சில நேரங்களில், சில தருணங்களுக்காக, சந்தோஷப்படுவதா?? வருத்தப்படுவதா?? என்று தெரியவில்லை. மே, ஜீன் மாதங்களில் திடீர் திடீரென பெய்யும் வெப்ப சலன மழை, இத்தகைய சங்கட நிலையை மனதிற்கு ஏற்படுத்துகிறது.
மழை பெய்வது நல்லதுதா?? என்று நீங்கள் நினைக்கலாம். மழை நல்லது தான். ஆனால், காலம் தவறிய மழையே, நம்மை வருத்தப்பட வைக்கிறது.
திடீர், திடீரென மேகம் கருக்கிறது. மின்னல் ஒளியை முகத்தில் பாய்ச்சுகிறது. இடி ஒசை காதை செவிடாக்கிறது. கோடை வெயில் தருணத்தில், புதியதோர் கால சூழ்நிலையை ஏற்படுத்துகிறது,. நாம் கோயமுத்தூரில் இருக்கிறம?? இல்லை பெங்களூரில் இருக்கிறம?? என்று மூளையில் உதிக்கும் கேள்விக்கு கூட விடை இல்லை.
தென் மேற்கு பருவ மழை தொடங்கி விட்ட நிலையில், நான் இருக்கும் வேதாரண்யம், நாகை பகுதிக்கு, வடகிழக்கு பருவ காற்று மற்றும் கடலில் உண்டாகும் காற்றழத்த தாழ்வு நிலையை தவிர, வேறெதெனிலும் மழை இல்லை. அப்படியிருக்கையில், பருவம் தவறிய மழையே நம்மை யோசிக்க வைக்கிறது..
2021 க்குள் பசுமை இல்ல வாயுக்களை குறைக்க முயற்சி எடுப்பதாக பாரிஸ் உச்சி மாநாட்டில் உலகநாடுகள் முடிவு எடுத்தாலும், அது நடைமுறைக்கு வருமா?? என்ற கேள்வியே மேலோங்குகிறது.
விஞ்ஞானத்தை துணை கொண்டு, தன்னை மேன்படுத்துவதாக சொல்லி கொண்டு, இயற்கையை அழிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறோம்.
இதனால் தான், நான் சந்தோஷப்படுவதா?? வருத்தப்படுவதா?? என்று தெரியவில்லை என்றேன்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment