Wednesday, March 30, 2016

பெண்ணின் குணம் எத்தகையது???

ஒரு பெண்ணின் குணம் சாந்தமான, அமைதியான குணமுள்ளவளாகவே, சங்க காலத்தில் இருந்து இன்று வரை அறியப்படுகிறாள். அதற்கு மாறாக, குரூரமாக இருப்பின், சமுதாயத்தினால் தூற்றப்படுகிறாள். இந்த குரூரமான செயல்பாடுகள், பெண் மட்டுமே காரணமல்ல; புற சூழ்நிலைகளும் காரணமாகவும் அமைகின்றன.
இளம் வயதில் விதவையான பெண்ணாவள், இத்தகைய வெளிப்பாடுகள் மூலம் தன்னை சுற்றி, ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொள்வாள். அது இயல்பானது.
அவ்வாறு இல்லாமல், சாந்தமான பெண்ணாக இருப்பின், பல்வேறு பாலியல் தொல்லைகளையும், ஏளன சிரிப்பினையும் கேட்க வேண்டியிருக்கும். அதற்காகவே, ஆணின் குணநலன்களுக்கு ஒப்பான மனநிலைக்கு மாற வேண்டியுள்ளது. அந்த மனநிலையை, “ திமிர் பிடித்தவள், அடங்கா பிடாரி” என்ற பெயரிட்டு அழைத்திருப்போம்.
பிதா மகன் படத்தில், சங்கீதாவின் கேரக்டர், இந்த பின்னிலையை கொண்டே அமைக்கப்பட்டு இருக்கும். கஞ்சா விற்கும் போது, ஆடவரினை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில், திமிர் பிடித்தவள் நிலை வெளிப்படும்.
இத்தகைய திமிர் பிடித்தவளுக்கு, இன்னொரு கோணமும் உண்டு. பணம், அழகு மற்றும் அறிவு ஆகியவற்றில் மேன்மை பெற்ற பெண்ணிடம், ஒரு வகை கர்வம் இருக்கும். இதையும் மேற்கண்டையும் ஒன்றாக வைத்து குழப்பி கொள்ள வேண்டும்.
இரண்டு வகையான கர்வ நிலையும், புற சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. முன்னது, சமூதாயத்தினால் உருவாக்கப்படுகிறது. பின்னது, பெண்ணாவள் தன்னை தானே உருவாக்கி கொள்வது....
இனிமேலாவது, ஒருத்தியை குறை கூறுவதற்கு முன் சற்று யோசியுங்கள்!!!!

No comments:

Post a Comment