ஆண்- பெண் சமநிலை என்பது எல்லா சூழ்நிலைகளிலும் நடக்காத காரியம் எனலாம். சில இடங்களில் ஆண்மை ஓங்குவதும், சில இடங்களில் பெண்மை ஓங்குவதும் தவிர்க்க முடியாது. அதனை விடுத்து, சமநிலையை தான் பேணுவேன் என்றால், இருபாலினத்துவ வேறுபாடு தேவைப்பட்டிருக்காது.
(இனப்பெருக்கத்தை தவிர்த்து)
(இனப்பெருக்கத்தை தவிர்த்து)
இயற்கையின் படைப்பியலில், ஆண்மை எந்தவளிற்கு முக்கியமோ, அந்தளவிற்கு பெண்மையும் முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்காலங்களில், ஆண்மைக்கும் பெண்மைக்கும் சரியாக இடமளிக்கப்பட்டதாகவே, நான் கருதுகிறேன்.
பொருளாதார சமத்துவம், அரசியல் சமத்துவம், பாலின சமத்துவம் என்ற இன்றைய கால பார்வையெல்லாம் ஆண்-பெண் சமநிலையை கொண்டு வந்து விடுமா?? என்ற கேள்விக்கு தவிர்க்க முடியவில்லை.
பெண்மை போற்றுவது, ஆண்மையின் கடமை. அது போல், ஆண்மையை போற்றுவதும் பெண்மையின் கடமை என்பேன்.
என்னை பொறுத்த வரை, வீட்டில் பெண்ணிற்கான அதிகாரமும், வெளியில் ஆணிற்கான அதிகாரமும், உளவியல் ரீதியாக சரியாக இருக்குமென தோன்றுகிறது. அதாவது வீட்டில் அன்பால் அதிகாரமும், வெளியில் ஆண்மையால் அதிகாரமும் சிறந்தென தோன்றுகிறது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment