Tuesday, March 22, 2016

யாரையும் புறக்கணிப்பு செய்து விடாதீர்கள்!!!

சில மனிதர்களை பார்க்கும் போது, ” ஏன் இப்படி இருக்கிறார்கள்,,, கடவுளே, ஏன் இப்படியான மனிதர்களையும் படைத்தாய்!!! “ என்று தூற்றியிருப்போம்.
இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதனால் தான், நாம் நல்லவர்களாக தெரிகிறோம் என்பதை மறந்து விட கூடாது. எல்லாரும் நல்லவர்களாக அமைந்து விட்டால் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்குமா?? இல்லையென்றால், நாம் நல்லவன் என்று வெளிக்காட்டி கொள்வது எங்ஙனம்??
நம்மை நல்லவன் என்று காட்டி கொள்ள, கெட்டவனோடு ஒப்பிட்டே வெளிக்கட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளது என்பதை மறவாதீர்கள்.
கெட்டவர்களிடமிருந்து, தெரிந்து கொள்ளவும் நிறைய கருத்துகள் உள்ளது. நல்லவர்களிடமிருந்து, நல்ல கருத்துகளை கற்று கொள்வதை போல, கெட்டவர்களிடமிருந்து எந்த காரியமெல்லாம் செய்யக்கூடாது என்று கற்று கொள்ளலாம்.
யாரையும் புறக்கணிப்பு செய்து விடாதீர்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment