Wednesday, March 16, 2016

சாதியமும் மனித மனநிலையும்

” உயர்சாதி பெண்ணை காதலித்தற்காக, தலித் மாணவர் வெட்டி கொலை ” என்ற செய்தி, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது.
தலித் என்பதை வெளியே சொல்லும் நம்மவர்கள், உயர்சாதி என்ற ஒற்றை வரியில், மற்றொரு சாதியின் பெயரை முழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறோம். ஏன் இத்தகைய ஒரு சார்பான மனநிலை??? ஏன் உயர்சாதியின் பெயரையும் வெளியிடலாமே???
இது போலவே, நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்படின், நடிகையின் பெயரை வெளியிடுவார்கள். ஆனால், நடிகையுடன் இருந்த பிரபலத்தின் பெயரையும் முழுங்கி விடுவோம்.
இந்த இரண்டு நிகழ்விலும், ஒரு பொது மனநிலை நம்மிடம் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும், கீழ் உள்ள மனிதத்தினை வெளிப்படுத்தும் சமுதாயம், மேல் உள்ள சமூகத்தினரை வெளிப்படுத்துவதில்லை; குற்றவாளியாகவும் பார்ப்பதில்லை;
மேற்கண்ட மனநிலை, சமூகத்தில் அனைத்து மக்களிடமும் காணப்படுகிறது. அச்சு மற்றும் ஒளி ஊடகங்கள் மட்டுமல்ல
இந்த மனநிலை முரண்பாட்டை நீக்காமல், சாதி, மதம், மொழி, இனம் போன்றவற்றின் ஒழிப்பை பேசுவதில் பயனில்லை
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

No comments:

Post a Comment