ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் போன்றவற்றால் மனிதம் பிரிந்து கிடக்கிறது. ஆனால், இதை முழுவதும் சமூகத்தில் இருந்து பிரித்தெடுப்பது என்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.
இந்த பிரிவினை வடிவங்கள், காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அடையலாமே தவிர, முழுவதும் மாறும் என்பது கானல் நீர் என்றே தோன்றுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய, வர்ணசிரம முறை, இன்று காணாமல் இருக்கலாம். ஆனால், அடுத்தக்கட்டமாக, சாதிய மற்றும் மத பிரிவினைகள் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டன.
ஏன்!!! அமெரிக்கா போன்ற முற்போக்கு சிந்தனை உள்ள நாட்டில் கூட, இன்று வரை நிறம் சார்ந்த பிரிவினை இன்று சிறிதளவு குறைந்திருக்கிறதே தவிர முழுவதும் மாறவில்லை.
இவையெல்லாம் மாறி, மனிதன் மனிதத் தன்மையை உணர்ந்தால், அரசும் தேவையில்லை!!! அரசியல் கட்சியும் தேவையில்லை!!! சமூக போராளி வேடமும் தேவையில்லை!!!!
சுயநலம் சார்ந்த சிந்தனை அதிகமாகும் சமூகத்தில், பொதுநலம் என்ற சிந்தனை எளிதாக வந்து விடும் என்று நினைப்பது , நகைப்புக்கு உரியதாக தெரிகிறது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment