வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் பரவி கிடக்கிறது
அது மன அழுத்தமாகவே மாறி நிற்கிறது…..
அதனை நீக்கும் புகலிடமாகவே
நகைச்சுவை அமைகிறது
தமிழ் சினிமாவும் சுற்றுலா துறையும்
அதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளது …..
கலகலப்பு, வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
சூது கவ்வும், ஒரு கல் ஒரு கண்ணாடி,
பாஸ் (எ) பாஸ்கரன் ………..இப்படியாக
பண வசுல் அதிகமாக பெற்ற பட வரிசை
நீண்டு கொண்டே செல்கிறது
மன புழுக்கத்தை நீக்கும் வடிகலாகவே
இப்படங்கள் அமைகிறது
இத்திரைப்படங்களில் நகைச்சுவையும்
தரமானதாக இல்லை என்பதும் வேதனை……
சந்தோஷத்தை வெளியே
தேடும் மக்கள் தான் இங்கு அதிகம் …..
தொழில் நுட்ப வளர்ச்சியும்
மேலை நாட்டு மோகமும்
நம்மை சந்தோஷத்தை
வெளியே தேட வைத்திருக்கிறது……
மனம் ஒரு குரங்கு என்ற வரியும்
ஒவ்வொரு மனிதனும் மன நோயாளி என்பதும்
நிதர்சனமானவையே!!!!
சற்று யோசித்து பார்க்கலாமே! நண்பர்களே!!!!
----உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
மரு. பெ.இரமேஷ் குமார்
No comments:
Post a Comment