காதலித்து வெற்றி பெற்றவருக்கும்
காதலிப்பவர்களுக்கும்
காதலிக்க காத்திருப்பவர்களுக்கும்
மனமார்ந்த காதலர் தின வாழ்த்துகள்!!!!!!!!
கணவன் மனைவி உறவை ஏற்படுத்தி
குடும்பம் என்ற கட்டமைப்பு
உண்டாக்கியவர்கள் தமிழர்கள் என்பது
செவி வழி செய்தி
காதல் எனும் கோடாரி
சமுதாய கட்டமைப்பில் உள்ள
சாதி எனும் வேரை வெட்டியதில்
பெருமை பட வேண்டி நிகழ்வே!!!!
காதலை நிர்ணயம் செய்யும்
தருணங்களும் நடைமுறைகளும்
தடம் மாறி தடுமாறி நிற்கிறது
காதலை பெறுவதற்காக காட்டப்படும் அன்பு
திருமணத்திற்கு பின்
சூழ்நிலைகளால் மறுக்கப்படும் போது
காணப்படும் வெறுமை…..
காதலிக்கும் போதும்
காதலர்களின் நல்ல குணங்கள் மட்டும்
வெளிபட்டு……
திருமணத்திற்கு பிறகு
நல்லவையை தாண்டி
கெட்டவை மட்டும் வெளியே தெரிவது
காலத்தின் கோலம்.!!!!
காதல் திருமணங்களிலும்
விவாகரத்து அதிகமாவதன்
காரணம் தான் அறிய முடியவில்லை????
புரிதலும் விட்டு கொடுத்தலும்
காதலை கூட விட்டு வைக்கவில்லை தானே!!!!
-----காதலிக்க தெரியாதவன்
(இது காதலர்களுக்கு எதிரான பதிவல்ல)
@ரமேஷ் குமார்
No comments:
Post a Comment