வெற்றி என்றொரு மாய ஜால வார்த்தைக்கு மயங்காதவர்கள்
உலகில் ஏவருமிலர்….
அது போல
தோல்வி என்ற வார்த்தைக்கு துவளாதவர்களளை காண முடியாது….
உலகத்தின் நாடக மேடையில்
மதிப்புமிக்க வார்த்தைகள் அவை …..
உன்னுடைய வெற்றி
மற்றவரின் தோல்வி என்பதை மறந்து விடாதே!!!!
வெற்றியாய் பெறுவதை காட்டிலும்
அதை நிலைநிறுத்தி கொள்வதற்கான
போராட்டங்களே இங்கு அதிகம்…….
வெற்றி தோல்வியை
ஆராய்ந்து பார்க்க தொடங்கி விட்டால்
உலகம் உன்னை எட்டி பார்க்கும்….
வெற்றி அடைவதற்கான
காரணங்களை விட
தோல்வி அடைவதற்கான காரணங்களை ஆராய்ந்தாலே
வெற்றி என்றொரு நிலையை அடைவாய்!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
மரு. பெ.இரமேஷ் குமார்
No comments:
Post a Comment