Medical Negligence என்ற வார்த்தை
மருத்துவ துறையில் முக்கியமான சொல்லாடல்!!! மருத்துவர்…… தன் நோயாளிகளினை சரியாக கவனிக்காத நிலை!!!
ஆனால் மருத்துவர்களே ….. தன் உடல்நிலை
பார்த்து கொள்ளாத நிலை அதிகமாகி வருகிறது. அதாவது Self Neglect என்ற பழக்கம்!!!!
Self Neglect என்ற பழக்கம்
மருத்துவத்துறை மட்டுமல்ல!!! அனைத்து துறை பணியாளர்களிலும் அதிகமாகி வருகிறது.
உடலையும் மனதினை பற்றி யோசிக்காமல் பொருளீட்டல் மட்டும் நோக்கமாக உலகம் மாறி
வருகையில்,
இது தவிர்க்க முடியாமல்
போய் விட்டது!!!
” மற்றவர்களின் உடல் நிலை
கவனிப்பவர்கள்…. தன்னுடைய உடல்நிலை
கவனிக்காமல இருப்பர்கள்?? “ என்ற பொது
பார்வையினால், மருத்துவ துறையில்
நடக்கும் வயது குறைந்த மரணம் பேசு பொருளாகிறது. மேலும் ஒய்வின்றி உழைக்கும் போது
மன அழுத்தம் அதிகமாகி இளம் வயதில் மாரடைப்பு அதிகமாகிறது.
பொது சமூகம்
மருத்து பணியாளர்களின் தனியர் வாழ்க்கை(personal life) சிறப்பாக இருப்பதாக நினைத்து கொள்கிறது. ஆனால்
உண்மை வேறு!!! சனி, ஞாயிறு கூட விடுமுறை
இல்லாமல்…..
தீபாவளி பொங்கல் கூட
விடுமுறை இல்லாமல்….. குடும்ப
நிகழ்வுகள் கூட கலந்து கொள்ளாமல்… ஏன் குடும்பத்தில்
கூட ஒழுங்காக பேசாமல்….. வேலை வேலை என்று
செல்லும் போது மன அழுத்தம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்!!!
கடந்த இரு
வாரங்களில் 4 சித்த மருத்துவர்களின் மரண செய்தி கலக்கமடைய செய்துள்ளது. இது
குடும்பத்திற்கும் சித்த மருத்துவ துறைக்கும் பேரரிழப்பு.
பொருளீட்டல்
சார்ந்த போட்டி உலகில், மன அழுத்தத்தை போக்க…. பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வில் நம்மை
ஈடுப்படுத்தி கொள்ள வேண்டும். பாட்டு கேட்கலாம்!! விளையாடுவதாக இருக்கலாம்!!!
புத்தக வாசிப்பாக இருக்கலாம்!!! சமூக சேவையாக இருக்கலாம்!!! நெடு தூர பயணமாக
இருக்கலாம்!!! எழுதுவதாக இருக்கலாம்!!!
எனக்கும்
ஏற்படும் மன அழுத்தத்தை போக்க….. புத்தக வாசிப்பு, முகநூலில் எழுதுவது, வார இறுதியில் TNPSC வகுப்பு என
பல்வேறு செய்கைகளை செய்வது வருகிறேன். அதில் புதிதாக இணைந்துள்ளது நண்பர்களுடான
நெடும் பயணம்!!!
நேற்றைய தினம்… நண்பர்களுடன் சேர்ந்து இம்காப்ஸ் வருடாந்திர
கூட்டத்திற்கு சென்று வந்தோம்!!! நமது அன்றாட அலுவல்களினை விடுத்து…. நண்பர்களுடன் கேலி கிண்டலுடன் உரையாடி…. புதிய இடங்களினை பார்வையிடும் போது மனம்
புத்துயிர் பெறுகிறது!!! ( யானைகள் புத்தூயிர் பயணம் போல)
விடியற்காலை…. நான்கு சக்கர வாகனத்தில் கிளம்பி சென்னைக்கு
அடைந்தோம்!!! நட்புகள், சீனியர், சூனியர் மருத்துவர்கள் என கூடி பேசி… மதிய உணவை உண்டு….. பரிசுகளோடு
திரும்பினோம்!!! பாண்டிச்சேரியில் ஆரோவில் பார்ப்பதற்கு பிளான் பண்ணி…. கடைசியில் கடலூர் சில்வர் பீச்சை மட்டும் கண்டு
, செல்பீகளோடு வரலாற்றை பதிவு செய்து
திரும்பினோம்!!!
நாளைய
நல்வாழ்க்கைக்காக…. இன்றைய மன ஆரோக்கியத்தை
இழந்து விடாதீர்கள்!!! “ சுவர் இருந்தால்
தான் சித்திரம் வரைய இயலும்!!!”
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment