சம
வாய்ப்பு குறித்த புரிதலில்….. வேறொரு கோணம்!!!
சமவாய்ப்பு
கிடைத்தால் மகிழ்ச்சி!! அவ்வாறு முடியாத தருணத்தில் ….. இருக்கும் சூழ்நிலையை வைத்து முன்னேற வேண்டும்!!! எதுவும் கிடைக்கவில்லை என்று
வீட்டில் உட்கார்ந்திருந்தால்…. எதுவும் நடக்காது!!! கடைசிவரை உட்கார்த்திருக்க
வேண்டியது தான்!!!
ஒரு கிராமத்தில்
பிறந்து…. டீக்கடைக்காரனின் ஏழை மகன் நான்!!! பத்தாம்
வகுப்பு வரை இலவச மதிய உணவை உண்டு வளர்ந்தவன் (12 வகுப்பு வரை கொடுக்கவில்லை….)!! இளம் வயதிலிருந்து பொருளாதார ரீதியாக பிரச்சனையை சந்தித்தவன்!!! கல்லூரி சென்ற
பிறகு……. நிலை இன்னும் மோசம்!!!! அதனையே நினைத்து
உட்கார்ந்திருந்தால்,…. இன்றும் அரசு மருத்துவராக இருந்திருக்க
முடியாது.
இரு இளைஞர்களை
கற்பனை செய்து கொள்வோம்!!! ஒருவன் அனைத்து செல்வங்களை பெற்றவன்!! மற்றொருவன்
ஏழையாக இருப்பவன்!!! இருவருக்கும் இடையில் சமமான சூழ்நிலை இல்லை என்பது உண்மை!!!
ஆனால் இருவரின் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்குமா??
பணக்காரரின்
மகனுக்கு…. தன்னுடைய சூழ்நிலையை தக்க வைத்து கொள்ள வைத்து
கொள்ள வேண்டும் என்று மட்டும் தான் எண்ணுவான்!!! ஆனால்…. ஏழையின் மகனோ….. அந்த சூழ்நிலையினை விட்டு வெளியேறி …. மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணுவான்!!!
இருவரில்.....
ஏழையின் எண்ணம் வலுவாக இருக்கும்!!! சூழ்நிலையினை தக்க வைத்து கொள்வனின் எண்ணத்தை
விட, சூழ்நிலையினை விட்டு வெளியேற துடிக்கும்
எண்ணத்தின் மதிப்பு அதிகம்!!! இன்றைய பெரிய சாதனையாளர் பெரும்பாலும் கடுமையான
காலத்தை அனுபவித்தவர்!! டெண்டுல்கர் தொடங்கி இன்றைய மோடி வரை!!!
ஆனால் நேர்
எதிர்மாறாக…… பணக்கார வாரிசுகளில் இரண்டாம் மூன்றாம்
தலைமுறையில் வீழ்ச்சி நிச்சயம்!!! பொருளாதார சூழற்சி போல….. குடும்ப தலைமுறைகளிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது!!! உங்களது
சுற்றப்புறத்தினை கவனித்தல் புரியும்!!!
ஏழை மாணவன்…. தனது சூழ்நிலையை எதிர்மறையை சிந்தனை தவிர்த்து…. நேர்மறையாக
சிந்தித்தால்… எளிதாக வெற்றி பெறலாம்!!! ஆனால்…. நாம் அவ்வறாக எண்ணுவதே இல்லை!!!
இப்போது
சொல்லுங்கள்!!! ஒரு சாதனையாளனை உருவாக்குவது எந்த சூழ்நிலை சிறந்தது ??? பணக்கார மகனா?? ஏழை மகனா???... நிச்சயமாக ஏழை
மகனின் சூழ்நிலை தான்!!! இவ்வாறு சிந்தித்தாலே வெற்றி நிச்சயம்!!!
சரி… அனைத்தும் ஏழைகளும் வெற்றி பெற்று விடுவார்களா?? இல்லை!!! பெண்மை
எப்படி சிறந்த ஆண்மையை தேர்ந்தெடுக்க விரும்புகிறதோ…. அது போல்…. பூமி தாயும் மிகச்சிறந்த குடிமக்களை தேர்ந்தெடுக்கும்!!!! தப்பி பிழைத்தல்
விதி தான்!!!
ஏழை மகனாக
சூழ்நிலையில் இருந்த வெளியேற ஏதேனும் ஒன்று கைக்கொடுக்கும்!!! அது கல்வியாக
இருக்கலாம்!! கலையாக இருக்கலாம்!!! விளையாட்டாக இருக்கலாம்!!!
எனக்கு கல்வி கை
கொடுத்தது!! கிராமத்து மாணவன்,
…. பணத்தின் திண்டாடுவன்
என்ற ரீதியில் நிறைய அவமானங்களை சந்திருக்கிறேன். அந்த அவமானங்களும், என்னுடைய மூலதனம்!!!
அவமானங்களை
ஏற்படுத்தியவர்களுக்கு நன்றி!!!
ஆகையால்….. பாகுபாடு நிறைந்தது தான் சமுதாயம்!! எல்லாருக்கும் சூழ்நிலைகள் சரியாக அமைந்து
விடுவதில்லை!!! அதனை அமைத்து கொள்வது தான் மனிதனின் ஆறாம் அறிவு!!! வெற்றி உங்கள்
கையில்!!! என்றும் சூழ்நிலையை நினைத்து கவலை பட வேண்டாம்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment