Wednesday, September 18, 2019

தேர்வுகளும் சமூக போக்கும்


ஆசிரிய பணியின் மீதிருந்த அவநம்பிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் வெகுவாக மாறியிருக்கிறது. நான் கடந்த காலங்களில் பாடம் நடத்தியதும் வினாக்கள் தயாரித்ததும்…… பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்து இருக்கிறது. அச்செய்கையின் போது…. எனக்கு உண்டாகும் சங்கடங்கள் அடிப்படையில் சம கால பிரச்சனையின் புரிதலே!!! இரண்டு நிகழ்வுகள்!!!

1. பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களை எடுப்பதற்கு முன்னால்… .அதனை குறித்து அடிப்படை தகவல்களை நடத்தி விட்டுபிறகு பாடங்களை எடுப்பது வழக்கம். இவை பெரும்பாலும் தேர்வுகளில் கேட்கபடாது!!! ஆனால் பின்னால் நடத்த கூடிய பாடங்களினை புரிந்து கொள்வதற்கு அவசியம்!!!!

சார்!! எக்சம் வர்றத மட்டும் நடத்துங்க!!! இவ்வளவெல்லாம் தேவையில்லை

சார்ரொம்ப டெப்த்தா நடத்துறா…. இந்த எக்சமுக்கு இதெல்லாம் தேவையில்லை

இப்படியெல்லாம் வேண்டாம் சார்!!! எக்சம் ல கேட்கிற கேள்விகளை மட்டும் நடத்துங்க!!!!

இந்த புரிதல்கள் மட்டும் பதில்களாக மாணவர்களிடமிருந்தும், பயிற்றுனர் களிடமிருந்து வந்தது.

தேர்வுக்கு என்று நடத்தாமல்…. அதனை பற்றிய முழுமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு நடத்துவதே எனது விருப்பம்!!! முழு மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தியெடுப்பதில் எனக்கு விருப்பமில்லை!!! இதன் பலனை 1-2 ஆண்டுகள் கழித்தே புரிந்து கொண்டனர் என்பது வேறு விஷயம்.

நிற்க!!!!

சமூகத்தின் எண்ணமும், மாணவர் மற்றும் பயிற்றுநர்களின் எண்ணமும்…. ஏன் பெரும்பாலான பயிற்சி நிறுவனங்களின் எண்ணமும் விருப்பமும்…… நமக்கு தேவை அரசு வேலை!!! அதற்கு தேர்வில் பாஸ் பண்ண வேண்டும்!!! அதற்கு மானப்பாடம் ஒப்புவித்தல் போதும்!!!

2. போட்டி தேர்வுகளுக்கு வினாக்கள் தயாரித்து அளித்து இருக்கிறேன். என்னுடைய கேள்விகள் பெரும்பாலும் கடினமாக இருப்பதாக மாணவர்களின் எண்ணம்!!! இது பொருளாதாரம், அரசியல் அறிவியல் மட்டுமல்ல!!! சித்த மருத்துவ தேர்விற்கு அதே நிலை தான்!!!

நிற்க!!!

கேள்விகள் புரிந்து கொண்டும் விடை அளிக்கும் அளவில் இருக்கும்!!! மாறாக மானப்பாடம் செய்ததை ஒப்பிக்கும் விதமாக இருக்காது!!! ஆதலால் கடினமாக இருப்பதாக மாணவர்களின் திண்ணம்!!! மாறாக பெரும்பாலான தேர்வு நிறுவனங்களின் கேள்வி தாளும் மானப்பாடம் செய்வதாக அமைகிறது!!! அரசு தேர்வுகளும்…. வாந்தியெடுப்பதாக அமைவது நிதர்சனம்!!

மேற்கண்ட இரு விஷயங்களிலும்…. ஒரு செய்தி தெளிவாக தெரியும்!!! நமக்கு தேவை வெற்றி!!! அதனை புரிந்து கொண்டு படித்தால்நீண்ட காலம் பிடிக்கும். மாறாக மானப்பாடம் செய்தால் மூன்று மாதம் படித்தால் கூட போதும்….. பாஸ் ஆகி விடலாம்!!!

இந்த மனநிலை சமூகம் முழுவதும் வியாதித்திருக்கிறது!!! இன்னும் சொல்ல போனால்….. முதல்நிலை தேர்வு, முதனிலை தேர்வு, நேர்முக தேர்விற்கு என்ன வித்தியாசம் ??? என்று கூட வித்தியாசம் தெரியாமல் பாஸ் செய்பவர்கள் அதிகம்!!!

பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடங்கள்…… பெரும்பாலும் பாட புத்தகங்களே!!! அப்படி இருக்கையில்…… ஏன் பயிற்சி மையங்களை அணுக வேண்டும்!!! அங்கு போனால்குறுக்கு வழிகளை கற்று கொடுப்பர்கள் என்று தானே??? மாறாக…. புரிந்து கொள்ளும் திறனுக்காக செல்கிறோம்??? (UPSC தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள்…. TNPSC தேர்வில் பாஸ் செய்வது கடினம்….. ஏன் என்றால்மேற்கண்டவையே விடைகள்)

இவ்வாறு தேர்வின் வழிமுறையை குறுக்கு வழியினால் சிதைத்து…. பிறகு தேர்வு சரியில்லை என்று வாதிட்டு கொண்டிருப்பதே நமது வாதமாகிறது?????

பிரச்சனை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பதே….. நமக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment