Thursday, September 26, 2019

இயற்கையும் எரிபூச்சியும்


கிராமங்களில்…… மாலை 6-7 மணியளவில் இருசக்கர வாகனங்களை ஒட்டுபவது சிரமம்!!! கண்களில் பூச்சி வந்து விழும்!!! அதிலும் எரி பூச்சி விழுந்தால் கஷ்டம்!!! தலை கலவசம் அல்லது கண்ணாடி போட்டால் தான், எந்த பிரச்சனையில்லாமல் செல்லலாம்.

ஆனால்கஜா புயலுக்கு பிறகு…. பூச்சிகளின் தொந்தரவு குறைந்திருந்ததுஏன் இல்லை என்றே சொல்லலாம். இதை சந்தோஷமாக எடுத்து கொள்ள முடியாது!!!

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்…. பல்வேறு வகையானது!! அதில் சுற்றுபுற சூழல் சார்ந்த மிக மோசமானது. பல்வேறு மரங்கள் முறிந்தது. கஜா புயலை தொடர்ந்து…. வடகிழக்கு பருவ மழை பெரியதாக இல்லை!!!

ஆதலால்…. கடந்த கோடை மிகவும் மோசமாக இருந்தது!!! எப்போதும் உள்ள வெயில் உக்கிரம் தான்!!! ஆனால்…. மரங்கள் இல்லாததால் மோசமாக தெரிந்தது!!! பல இடங்களில் தண்ணீர் பஞ்சமும் உபரியாக வந்து விட்டது.

இருந்த போதிலும் ……… தென்மேற்கு பருவமழையினால் வேதாரண்யம் பகுதிக்கு மழை இல்லையென்றாலும்வெப்ப சலனம், மேலடுக்கு சுழற்சி போன்றவற்றால்…. மழை விட்டு விட்டு பெய்தது!!! அதோடு காவிரி ஆற்று நீரும் சேர்ந்து கொண்டது!!

கடந்த ஒரு மாதமாக…… தொடர்ந்து மழை பெய்ததில்….. மீதமிருந்த மரங்கள் தழைந்தோங்கி வளர்ந்து நிற்கிறது. சிறு செடிகளிலும் அதிகளவில் முளைத்துள்ளது. பெரும்பாலும் களை செடியாக இருந்தாலும்…. பார்ப்பதற்கு பசுமையாக இருக்கிறது!!!

இதோடு…. இப்போது….. எரிபூச்சிகளிலும் விழவும் ஆரம்பித்து விட்டது!!! சுற்றுபுற சூழல் மீண்டும் புத்துயிர் பெற்று விட்டது போலும்!!! ஈசல் உருவாக்கம்…… கம்பளி பூச்சி உருவாதல்….. ஒலை பாம்பு வருதல்…. என இயற்கையின் சமிக்கைகள் நன்றாக இருக்கின்றது!!! வருகின்ற வட கிழக்கு பருவ மழை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்!!!

துன்பத்திலும் இன்பம் காண முயல்வோம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment