Thursday, September 19, 2019

5 வகுப்பு பொது தேர்வும், எனது புரிதலும்


எனக்கு நினைவு தெரிந்தவரை… .மூன்றாம் வகுப்பிலிருந்து தேர்வு எழுதியதாக ஞாபகம்!!!! இடைநிற்றல் தடுப்பத்தற்காக…. எட்டு வகுப்பு வரை தேர்வு முறையை ரத்து செய்தது மத்திய அரசு!!! குழந்தைகளுக்கு மன அழுத்தம் தர வேண்டாம் என்பதற்காக, அனைவரும் வரவேற்றனர்.

மருத்துவ ரீதியாக பார்த்தால், மனித மூளை முழு வளர்ச்சியும் 5-10 வயதிற்குள் முடிந்து விடும்!!! இந்த தருணத்தில் அடிப்படை செயல்களை கற்று கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை விடுத்து மனப்பாடம் செய்து வைத்தால், குழந்தைகளுக்கே மன அழுத்தம் வந்து விடும்!!!

மனித இனம் காலத்திற்கேற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. பெற்றொர்களை விட குழந்தைகள் அறிவுபூர்வமாகவே இருக்கிறார்( தாய் எட்டடிப் பாய்ந்தால் குழந்தை 16 அடி பாயும்). இதற்கு ஏற்ப பாட திட்டங்களும் மாறி வருகிறது.

முன்பெல்லாம் 3 ஆம் வகுப்பிலிருந்து தான் ஆங்கில எழுத்துகளே கற்று தரப்படும். ஆனால்இன்றோ…. எல்கேஜியிலிருந்தே ஆங்கில எழுத்துகள் கற்று தரப்படுகின்றது. இவ்வளவு முன்னரே தேவையா?? என்றால் நிச்சயமாக கிடையாது. என்னை பொறுத்தவரை….. 5 வயதிற்கு பிறகு பள்ளியிற்கு அனுப்புவதே மிக சிறந்தது!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.... நடந்த நிகழ்வை…. இத்தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன். மருத்துவம் பார்க்க வந்த குழந்தை( 3 வயது), தன் அப்பாவிடம் டைம் ஆயிச்சு!!! என்றது எதுக்கென்று விசாரித்தால்…. டியூசன் என்றார். பள்ளிக்கூடத்தில் நடத்து பாடத்தை நடத்தும் அளவுக்கு பெற்றோர் படிக்கவில்லை என்பது ஒரு காரணம்!!! குழந்தை வைத்து சமாளிக்க முடியவில்லை என்பது மற்றொரு காரணம்!!!!

சரிவிஷயத்திற்கு வருவோம்!!! நீங்கள் 8 வகுப்பு படித்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்!!! உங்கள் தேர்வு இல்லை…. அனைவரும் தேர்ச்சி என்றால், புத்தகங்களை படிப்பீர்களா??? நிச்சயமாக மாட்டோம்(என்னையும் சேர்த்து தான்). தேவை ஏற்படாமல் எதையும் செய்ய மாட்டோம்!!! எதற்காக தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டும்? “ என்ற எண்ணம் வருவது இயல்புதானே??

ஆனால்ஆரம்ப கல்வி மற்றும் நடுநிலை கல்வியின் அடிப்படையினை கொண்டு தான்…. உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியின் பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன…… 8 வருடங்களாக எதையும் கற்று கொள்ளாமல்…. திடீரென்று படி என்றால்???? மாணவன் என்ன செய்வான்??? அதோடு மட்டுமல்லாமல்….. புதிய பாடத்திட்டம் கடின தன்மையும் அதிகமும் கூட!!!

இதோடு சம கால உலக சூழலையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. முன்பொரு காலத்தில் பள்ளிக்கூடம் முடிந்திருந்தாலே, ஆசிரியர் பணிக்காக தகுதியாக வகுக்கப்பட்டது. பிறகு பட்டய படிப்பு கொண்டு வரப்பட்டது. இப்போது தகுதி தேர்வோடு கூடிய போட்டி தேர்வு வந்து விட்டது. வருங்காலத்தில்…. ஐந்து/பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான், ஆசிரியர் பணியில் தொடரலாம் என்ற நிலை கூட வரலாம்!!!

ஏன் இத்தனை மாற்றம்!!!!போட்டிகளே இல்லாத உலகத்திலிருந்துபோட்டி நிறைந்த உலகத்தினை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்!!! இப்போதைய போட்டி உலகம் பல்திறன் கொண்டவர்களை வரவேற்கும்!!! திறமையற்றவனை புறம் தள்ளும்!!! டார்வினின் தப்பி பிழைத்தல் விதி தான்!!! எளிதாக சொல்ல வேண்டுமானால்…. முன்பெல்லாம் ஹீரோவிற்கு நடிக்க தெரிந்தால் போதும்!!! ஆனால் இன்றோநடிப்பதை தாண்டி…. டான்ஸ்ஆக்சன் …… சிங்கிங் என அனைத்தும் தேவைப்படுகிறது.

அடுத்ததாக…. தேர்வு என்ற உடனே பயம் தொற்றி கொள்ளுகிறது. அதுவும் நீட் வந்தவுடன் நிலைமை இன்னும் மோசமானது!!! தேர்வுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து…. தேர்வு குறித்த பயம் அடையாளமாக வெளி வருகிறது.

நடைமுறையில்…. ஒருவனை ஆய்வு செய்வதற்கு/ தரத்தை நிர்ணயம் செய்வதற்கு தேர்வை தவிர வேறென்றும் இல்லை என்பது நிதர்சனம்!!! ஆதலால்தேர்வை ஏற்று கொள்வது காலத்தின் கட்டாயம்!!! குழந்தைகளுக்கு ஏற்ப மிக எளிமையான தேர்வுகளை நடத்தும் போது…. பெரியளவில் பாதிப்பு ஏற்படாது!!!!

இறுதியாக…… மனித மனம் கட்டாயத்தில் மட்டும் பணியாற்றும்!!!! உலக போட்டிற்கு ஏற்ப நம்மை தயார் படுத்தி கொள்வதும் அவசியம்!!!! குழந்தைகளின் வயது குறைவு என்றாலும்……. எளிமையான தேர்வு வைப்பில் குறையென்று இல்லை கண்ணே!!!


உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment