Friday, March 31, 2017

இறை வணக்கமும் பரிகாரமும்

இறைவனை வணங்குவதற்காக, கோயிலுக்கு அதிகமாக சென்றதில்லை. மற்றவர் விருப்பப்பட்டால், அவருடன் சேர்ந்து பயணித்தது மட்டுமே உண்டு. அப்படியே சென்றாலும், “நீ இந்த வேண்டுதலை நிறைவேற்ற கொடு, உனக்கு இதை தருகிறேன்என்ற (give and take policy) வரைமுறைகளில், எனக்கு விரும்பமில்லை.

மனித குணம் தான், எப்போதும் பிரதிபலனை எதிர்ப்பார்த்தே எச்செயலையும் செய்யும். (மாறாக, பிரதிபலனை பார்க்காதவர்களும் உண்டு. அவர்களை வேண்டுமானால் கடவுள் நிலை வைத்து கொள்ளலலாம்.)

கடவுள் மனிதனை விட உயர்ந்தவன்என்ற வாதம் உண்மையானால், வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, கடவுளுக்கு வெகுமதிகள் தேவையில்லை என்று எண்ணுகிறேன். அப்படியே வெகுமதிகளை தருபவருக்கே, இறைவனின் மனம் செவி சாய்க்குமெனில், லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு ஒப்பாக இறைவனை கருதலாமா???

ஊதியமாக பணத்தை பெற்று கொண்டு செய்யும் தொழிலாளிக்கு ஒப்பாக, நாம் இறைவன் வைத்திருக்கிறோமா????

மேற்கண்ட உண்மையானால், பணக்காரர்களுக்கு எல்லா நன்மைகளும் ஏழைகளுக்கு எல்லா தீமைகளும் நடக்க வேண்டும் அல்லவா!?!? மாறாக பணக்காரன் மற்றும் ஏழை ஆகிய இருவருக்குமே..... நன்மை மற்றும் தீமை என இரண்டும் கலந்தே நடக்கிறது.

எல்லாவற்றிலும் மேலாக, நாத்திகர்களுக்கு எந்தவித நன்மைகளும் நடக்காமலா இருக்கு!?!?!?

--------------------------------------------------------------------------------------------------

மேற்கண்ட கேள்விகளை மனதில் கொண்டு, நான் நாத்திகன் என்று எண்ண வேண்டாம், எனக்கும் இறை நம்பிக்கை உண்டு. ஆனால், அதன் புரிதல் வேறு!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment