எந்தவொரு
அமைப்பும்….. குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது பொதுக்குழு
கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது
விதி. ஏனெனில், கடந்த வருடத்தின் செய்த
நல்ல, கெட்ட காரியங்கள், வரவு
செலவு கணக்குகள் மற்றும் அடுத்த வருடம்
செய்ய வேண்டிய காரியங்களை பற்றி
விவாதிப்பது அவசியமாகிறது. வளர்ச்சி கட்டத்தில்… சுய விமர்சனம் என்பது
மிக முக்கியமானது!!!
அமைப்பு/
இயக்கத்திற்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் சுய விமர்சனம் மிக
முக்கியம். அதன் ஒரு வழியாகவே
மத்திய பட்ஜெட் மற்றும் மாநில
பட்ஜெட் அமைகிறது. மேலும் பட்ஜெட்டிற்கு முதல்
நாள் வெளியிடப்படும் Econmic survey ம் இதில் அடக்கம்!!!!
நாடு மற்றும் இயக்கம்/அமைப்பை
தாண்டி, பொருளாதார பிரச்சனைகளை பற்றிய விவாதங்களை மேற்கொள்ள
வேண்டிய மற்றொரு இடம் வீடு!!!!
இப்படியான விவாதமே, எனது வீட்டில் நேற்று
நடந்தது. இது மாதிரியான விவாதங்கள்…
பலமுறை நடந்துள்ளது…
இன்றைய
சூழ்நிலையில்… குடும்பத்தின் பொருளாதார விவகாரங்களை அறிந்து கொள்ள, குழந்தைகள்
விரும்பவில்லை. மேலும் நாமும் கற்ற
தருவதும் இல்லை!!! ” பைக் வேண்டும்…” என்று
பையன் கேட்டால், பெற்றோர் வாங்கி தர வேண்டிய
நிலை மட்டுமே உள்ளது. ” அது
தேவையா??? “ என்பது போன்ற விவாதங்களே
நடைபெறுவதில்லை!!!!
பொருளாதார
அளவில், நாம் பெரிய முன்னேற்றத்தை
அடைந்திருப்பதனால்…. ” அந்த கேள்விக்கே அவசியம்
இல்லை ” என்ற நிலைக்கே வந்து
விட்டது. அது சரியா தவறா??
என்ற சுய விமர்சனம் தேவையென்றே
நினைக்கிறேன்.
தனிநபர்
செயல்பாடுகளினால், பெரிய அளவிலளான பொருளாதார
சீர்க்கேடுகள் தினந்தோறும் நடந்து வருகிறது. அத்தகைய
சீர்கேடுகளை தடுக்க… ஒவ்வொரு.வீட்டிற்குள்ளேயும்
பொது குழு விவாதம் அவசியம்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment