Monday, December 26, 2016

சித்த மருத்துவத்தில் விவாதத்தின் பங்கு

விவாதங்களினால் முற்று பெற்ற முடிவுகள் எடுக்க முடியாது என்பது நிதர்சனமான இருந்தாலும், முடிவுகள் எடுப்பதற்கான செம்மையான பாதை விவாதங்கள் ஏற்படுத்தி தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!!!!

ஒவ்வொரு துறையிலும், விரிவான, மனம் திறந்த விவாதங்கள் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுவே அத்துறையின் வளர்ச்சியிற்கு சிறந்தது. மாறாக, விவாதங்கள் நடைபெறும் போது, தனிநபர் விமர்சனமாக மாறி கருத்து செறிவு குறைந்து விடுகிறது. இந்த செய்கையே, விவாதம் குறித்த மோசமான பிம்பங்களை, காண்பித்து விடுகிறது.

பண்டைய கால வரலாற்றில் கூட, இந்து மதம், பெளத்தம் மற்றும் சமண சமயத்தின் வளர்ச்சிக்கு விவாதங்கள் முக்கிய பங்கு வகித்தன. இப்போதும் கூட, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் கூட விவாதங்கள் மிக முக்கியமானவை. தந்தி டிவியையும், புதிய தலைமுறை டிவியையும் பார்த்து விட்டு…. விவாதங்கள் தேவையில்லை என்று எண்ண வேண்டாம்!?!?!?

நானும், அதிகளவு விவாதம் புரிய விரும்புபவன்!!! அது எந்த துறையாக இருந்தாலும் சரி!!!! அதிலும் எதிர் கருத்து உள்ளவர்களுடன் விவாதம் புரியும் போது, என்னுடைய அறிவை மேம்படுத்தி கொள்ள உதவும்.

சித்த மருத்துவ துறையின் வளர்ச்சிக்கும் விவாதங்கள் மிக முக்கியம் என்றால் மிகையல்ல!!! பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கும், பராம்பரிய் மருத்துவர்களுக்கும் இடையே வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

மாற்று மருத்துவ துறையின் கருத்துகளையும், பொதுமக்களின் கருத்துகளையும் உள்வாங்கி கொள்வதும் அவசியம். வரலாற்று ஆசிரியர்கள், ஊடகவிலாயர்கள், ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அறிஞர்கள், சுவட்டியல் அறிஞர்கள், தாவரவியல் அறிஞர்கள், ராசாயண ஆய்வாளர்கள், மானுடவியலாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற பல்துறை அறிஞர்களுடன் வெளிப்படையான விவாதம் அவசியம்!!!

இதையெல்லாம் தாண்டி, சித்த மருத்துவத்தின் அடிப்படையை மாற்று துறையினர் உள் வாங்கி கொள்ளாமல்….. மேற்கண்ட எதுவும் சாத்தியமும் இல்லை!!!!

தத்துவத்தின் வழியை விட்டு விடாமலும், அறிவியல் பாதையை ஏற்று கொண்டு பயணிப்பதும் நல்லது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment