Thursday, December 22, 2016

புனைவு இலக்கியங்கள் மீதான பார்வை

எனக்கு புனைவு இலக்கியங்கள் மீது , எப்போதும் விருப்பம் இருந்ததே இல்லை( சரித்திர நாவலை தவிர). அதற்காக காரணத்தையும் அறிய முடியவில்லை!!!

இந்த நாவலை படித்திருக்கிறயா?? இந்த சிறுகதை தொகுப்பை படித்திருக்கிறயா?? ”என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்பேன்!!! பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்ற நாவலை மட்டுமே படித்திருக்கிறேன்!!! தியாக பூமி நாவலை படிக்கும் போது, எப்போது முடியும் என்ற நிலை தான் தோன்றுகிறது.

இதற்காக எழுத்தாளர்களை குறை சொல்ல விருப்பமும் இல்லை!!! இது என்னுடைய தன்னிலை விளக்கம்......

ஒரு கருத்தை..... கதை வழியே செல்லும் போது, அதன் வலிமை அதிகம் என்பதனாலே.... அக்கதை/ நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ” அக்கருத்தை வெளிக்கொணர , அந்தளவிற்கு சுற்றி வளைத்து பேச வேண்டியதில்லை...” என்பது என்னுடைய நிலை !!!!

நாவல்கள் வழியே... வாழ்க்கை நடைமுறை, கலச்சார பிண்ணனி, மனித உளவியல் போன்றவற்றை தெரிந்து கொள்ளலலாம் என்றாலும், அத்தகவுகளை ஆய்வு கட்டுரைகள் வழியே பெற முடியும் என்று நினைக்கிறேன்.

இதற்கான பிண்ணனி உளவியலை, நவீன அறிவியல் வழியே அறிய முடியவில்லை. ஆனால் சித்த மருத்துவத்தின் அடிப்படை வழியே அறிய முடிகிறது!!!

என்னுடைய உடலமைப்பு மற்றும் மன அமைப்பு, பித்தம் மற்றும் வாதத்தினால் ஆக்கப்பட்டது. இத்தகைய உடலமைப்பினருக்கு, ஒரு கருத்தை புனைகளின் வழியே தெரிந்து கொள்வதில் விருப்பம் இருக்காது!!! நேரடியான புரிந்து கொள்வர்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment