#ambujasimi எனும் பேக் ஐடி பற்றி தான், கடந்த ஒரு வார
காலமாக, முகநூல் முழுவதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. சுமார் 2.50 லட்ச பார்வையாளர்களை
கொண்டுள்ள, இந்த அக்கவுண்டை…. ஒர் ஆண் ஊடகவியலாளர் பயன்படுத்தி உள்ளார்.
இதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக, ஒரு பெண்ணின் போட்டாவை போட்டு உள்ளார். மேலும் திருமணம்
மற்றும் குழந்தைகளின் போட்டாவையும் போட்டு, உயிர்ப்போடு வைத்துள்ளார். ஒரு பெண்ணின்
போட்டாவை, அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறானது.
இந்த செய்தியை
படித்தவுடன், ஒரு திரைப்படத்தின் வசனமே, என் மனதில் கடந்து சென்றது. தனுஷ் நடித்த
”திருவிளையாடல் ஆரம்பம்” படம் தான் அது!!!!
தனுஷிற்கு தொழில்
செய்து முன்னேற வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. ஆனால் அதற்கான பணம், அவரிடம்
இருக்காது. அதற்கு தன்னுடைய காதலை மூலதனமாக வைத்து, பணம் பெற்று, வியாபரத்தில் வெற்றி
பெறுவார். தொழில் செய்வதற்கு, யாரும் பணம் கொடுக்க முன்வராத நிலையில், தன்னுடைய காதலை
பயன்படுத்தியாதாகவும், ஆனால் என்னுடைய காதல் உண்மையானது என்று நியாயம் பேசுவார். அதில்
அவருடைய பாதை தவறு என்றாலும்… அவருடைய நோக்கம் சரியானது என்ற நிலையில்
ஒத்து கொள்ளாலமே தவிர, முழுவதும் நியாயப்படுத்த இயலாது. இந்த நிகழ்வையும்… இந்த காட்சியோடு ஒப்பிடுவதில்
தவறில்லை என்று நினைக்கிறேன்..
நான், இதனை தாண்டிய
உளவியலையே காண முயல்கிறேன். முகநூல் உலகம் சற்று விசித்திரமானது. முகநூலில் பெண்களின்
பேச்சுக்கும் எழுத்தும் கிடைக்கும் மரியாதையும் ஆதரவும், வெளியுலக யதார்த்தில் நிச்சயமாக
கிடைக்காது. “சாட்டையடி பதிவு தோழி, சூப்பர் தோழி…..” இப்படியாக புகழ்ந்து தள்ளுவர்கள், நிழயுலகில்
பெண்ணின் பேச்சுக்கு கூட மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.
ஒரே பதிவை, ஆண்
போடுவதற்கும், ஒரு பெண் போடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஆணுக்கு 10 லைக்
கிடைக்கிறது என்றால், அதே பதிவினை, பெண் போட்டால் 100 லைக் கிடைக்கும். அந்த கருத்து
சரியா? தவறா? என்ற கேள்வியே இல்லாமல், வழிமொழிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஹார்மோன்
செய்யும் எதிர்பாலின கவர்ச்சியின் வெளிப்பாடே!!!!
”பெண்
பாலித்துனத்துடன், பேச வேண்டும்” என்ற ஆண் பாலினத்தின் எண்ணம், முகநூல் வழியாக
எளிதாக பயணப்படுகிறது. அதற்கு காரணம் தேவையில்லை!!! நேரடியாக பேசுவதில் உள்ள அசுசைகளை,
சமூக வலைத்தளங்கள் எளிதாக உடைத்து எறிகிறது.
”தன்னை
ஆதரிக்க வேண்டும்.”, “ தன்னுடைய திறமைகளை அங்கிகாரம் கிடைக்க வேண்டும்” என்ற எண்ணமும் மறுபுறம்
அதிகமாகி வருகிறது. இந்த எண்ணத்தில் ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லோரும்
ஒன்று தான்!!!
இந்த இரண்டும்
புள்ளிகளையும் இணைக்கும் இடமாக முகநூல் அமைகிறது. அதிலும் பெண் தோல் போர்த்திய ஆணுடல்
என்றால், இன்னும் சவுகரியம் அதிகமாக இருக்கும்!!!!
இந்த மனநிலையில்
இருந்து தான்…
அந்த முகநூல் போராளியை காண்கிறேன். அவர் செய்த குற்றத்தை நியாயப்படுத்தவும் முடியாது;
நியாயப்படுத்தவும் கூடாது.
அதே சமயத்தில்…. அந்த குற்றத்திற்காக…. அவரை மட்டும் குற்றவாளி
கூட்டில் ஏற்றி, நாம் எல்லோரும் நிரபராதி போல் நடிப்பதிலும், எனக்கு உடன்பாடில்லை.
அந்த நபரே குற்றமே செய்தவராக இருந்தாலும், அத்தகைய நிலைக்கு கொண்டு சென்றது, சமூகம்
என்பதில் சிறிதும் ஐயமில்லை!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:
Post a Comment