நான் எப்போதும் மூன்று வழிகளிலே, அறிவை
பெறுகிறேன். 1. கண்டல் 2. கருதல்/அனுமானம். 3. உரைகள்.
இவைகளே தத்துவ ஞானத்தை விளக்கவும்
உபயோகப்படுத்தப்படுகிறது.
முதலாவது…..
நாம் கண்ணால் காண கூடிய
விஷயங்களை வைத்து, ஒரு வகையான
அறிவை பெற இயலும். இதுவே
மனிதனுக்கு மிக முக்கியமானது. இவ்வகையான
observation வைத்து நிறைய உண்மைகளை பெற
இயலும். ஒவ்வொரு நிமிடம் கடந்து
செல்லுகையில், அதிலிருந்து பல விஷயங்களை பெற
இயலும். அது நல்லவையாகவும் இருக்கலாம்;
கெட்டவையாகவும் இருக்கலாம்.
இரண்டாவது……
ஒருவர் கூறும் கருத்திலிருந்து, நாம்
பெற்று கொள்ளும் அறிவு/புரிதல் ஆகும்.
நாம், தினந்தோறும் பல்லாயிர கணக்காக செய்திகளை கேட்கிறோம்;
சொல்கிறோம். அவற்றின் உண்மை தன்மை பற்றி,
நாம் யோசித்ததில்லை.
எல்லா விஷயங்களையும், நம் கண்ணால் மட்டுமே
கண்டு அறிவை பெற இயலாது.
அதனால் தான், மற்றவரின் கருத்தையும்
பெற வேண்டியது அவசியமாகிறது.
மூன்றாவது
…. உரைகள்/நூல்கள்: மக்களின் முக்கியமான அறிவு தேடலின் பீடமாக
உள்ளது. இதனுள் புத்தகங்கள், நாளிதழ்கள்,
சஞ்சிகைகள் மற்றும் ஒலி,ஒளி
படைப்புகள் அனைத்துமே அடங்கும். ஆனால், சமீப காலங்களில்,
இதன் மீது சந்தேக கண்
வீசுவது அவசியமாகிறது.
எந்தவொரு
மானுடமும், மேற்கண்ட ஒன்றின் மூலம் மட்டுமே
அறிவை பெறுதல் இயலாத காரியமாகும்.
ஆதலால், மூன்றினையும் பயன்படுத்த தயங்குதல் கூடாது. நான், “ எந்த
துறையை சார்ந்தவராக இருந்தாலும், அத்துறையின் சாதக பாதகங்களை, அவரிடமிருந்தே
பேசி கேட்டு கொள்வேன்”. அது
போல், புத்தகங்களிலிருந்து பெறும் அறிவு எண்ணில்
அடங்கா!!!!
ஆனால்,
அனைத்திலும் முக்கியமானது!!! நாம் பெறும் தகவலை
பகுத்தறிவதே!!!!!
“ கண்ணால்
காண்பதும் பொய், காதால் கேட்பதும்
பொய், தீர விசாரிப்பதே மெய்!!
“ என்பது பொய்யாகுமா என்ன?????
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment