#கவிதை_1
சிக்கி முக்கி
கல்லில்
சிக்குண்ட தீம்பிழம்பாய்
சித்தனின் மனம்
சிக்குண்டது!!!!
நிலையில்லா உயிரை
நிலையென
நிற்க வைத்தது
நின்னவளின் நிஜங்கள்!!!!
#கவிதை_2
விழி பாடும் பாதையில்
வழிந்தோடும் வியர்வை!!!
மொழி பேசும் வார்த்தையில்
மறைந்த உண்மை!!!!
காசி தந்த பார்வையில்
கழிந்த வாழ்க்கை!!!!
அவன் விரித்த வலையில்
அவள் எழுந்தாள்
நினைவில்
காதலெனும் காமத்தால்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment