Friday, July 26, 2019

இட ஒதுக்கீடும் எனது புரிதலும் 2


இட ஒதுக்கீடு முறையில் நிறைய சிக்கல்கள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை சதவீத மக்கள் இருக்கிறார்கள் என்று முறையாக அறிய முடியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பற்றி புள்ளி விவரங்கள் மட்டுமே முழுமையாக இருக்கின்றனர். மற்றைய பிரிவுகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு முறை என்பது யூகத்தின் அடிப்படையிலே வழங்கப்படுகின்றன. 2021 கணக்கெடுப்பில் சாதிய ரீதியாக கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அது மட்டுமல்ல, மாநிலத்திற்கு மாநிலம் வாழும் பிற்படுத்தப்பட்டோர்/அட்டவணை பிரிவினர் போன்றவர்களின் விகிதாச்சாரம் மாறுபடும். இதனால் மாநிலம் சார்ந்த இட ஒதுக்கிட்டில் பிரச்சனையில்லை. மத்திய அரசு வேலைகளில் பிரச்சனையை உண்டு பண்ணும். எ.கா. தமிழ்நாட்டில் உயர் ஜாதி இந்துகள் மிக குறைவு. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் அதிகம். வட இந்தியாவில் உயர் ஜாதி இந்துகள் அதிகம். அவ்வாறு இருக்கையில் இந்திய முழுமைக்கும், ஒரே மாதிரியான இட ஒதுக்கீடு நிறைய பிரச்சனை வருகிறது.

ஒரு நற்செயல் செய்யும் போது, சில பாதிப்புகள் ஏற்படும். அது போல் இடஒதுக்கீடு சில பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியினர், இட ஒதுக்கீடு மூலம் பயனடையும் போது…. அதே பிரிவுகளில் உள்ள மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அது போல் பொது பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இட ஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை விட அதிகமாக கொடுக்கப்படும் போது, சமூக நீதி காப்பாற்றப்படுவதாக தோன்றலாம். ஆனால், சமூகம் சிறந்த பல அறிஞர்களை இழக்கலாம். வளமான எதிர்கால சமுதாயத்திற்கு திறமை சார்ந்த அங்கிகாரங்கள் தேவை. ( நவீன உலகில் திறமைக்கான அங்கிகாரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் இட ஒதுக்கீடு மட்டுமல்ல. பொது மக்களின் கண்ணோட்டமும் அப்படி…)

என் கருத்தின் படி, இந்திர சகானி வழக்கோடு உடன்படுகிறேன். அதாவது இட ஒதுக்கீடு என்பது 50% தாண்ட கூடாது. ஒரு சமூகம், சமுதாயத்தில் 20 % இருக்கிறது என்றால், 10 % இட ஒதுக்கீடு அளிக்கலாம். திறமையும் அங்கிகாரம் செய்யப்படும்; சமூக நீதியும் காக்கப்படும்.

இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது(என்னை பொறுத்தவரை). ஆனால் நீதிமன்றம் உரிமை என்று கூறியதாக நினைவு. இத்தகைய சூழ்நிலையில், பத்தாண்டு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இதுவும் நடப்பதில்லை.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பதும், கல்வியில் இட ஒதுக்கீடு என்பதையும் சமூக நீதி பார்வையோடு மட்டும் ஒதுக்கி விட முடியாது. நிச்சயமாக பொருளாதாரம் சார்ந்த நீதியை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பின் ஒன்றாவது சட்டத்திருத்தமும் அதனை தான் சொல்கிறது.

முந்தைய காலத்தில் சாதியம் சார்ந்த பாகுபாடு சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் பெருமளவு குறையவில்லை யென்றாலும், பெரியளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டு குறைய தொடங்கி இருக்கிறது. அடுத்ததாக பொருளாதாரம் சார்ந்த பாகுபாட்டை நோக்கி சமுதாயம் பயணிக்க ஆரம்பித்து விட்டது.

ஆதலால் சமூக காரணிகள் மற்றும் பொருளாதார காரணிகளை கொண்டு இடஒதுக்கீடு( அட்டவணை பிரிவினரை தவிர்த்து) பற்றி சிந்திக்க வேண்டும். இதனை உச்சநீதிமன்றமும், பல்வேறு தருணங்களில் எடுத்து சொல்லியிருக்கிறது. முறையான தரவுகள் அடிப்படையில், இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும். பத்தாண்டு ஒருமுறை மறு ஆய்வு செய்ய பட வேண்டும்

அடுத்ததாக……..

தற்சமயத்தில் எஸ்பிஜ தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மிக குறைவான மதிப்பெண்ணோடு தேர்வாகி இருந்தனர். இதற்கு எனக்கு தெரிந்த காரணங்களை முன் வைக்கிறேன். தமிழ்நாட்டில் உயர் சாதி இந்துகள் வெகு குறைவு. தேர்வு எழுதியவர்களில் குறிப்பிட்ட சதவீத்தை எடுத்தாக வேண்டும். மேற்கண்ட தேர்வு என்பது மாநில அளவிலான மதிப்பெண் பட்டியல். ஆனால் இந்திய அளவிலான பட்டியலில் குறைவான மதிப்பெண் இல்லை.

பொருளாதார அளவீடாக, 8 லட்சத்திற்கு குறைவு என்று வைத்துள்ளனர். தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் படி, இந்தியாவில் 99 சதவீத மக்கள் 8 லட்சத்திற்கு குறைவானவர்களே!!! இது மத்திய அரசின் இதர பிற்படுத்த வகுப்பினரின் அதிகபட்ச உச்ச வரம்பின் அடிப்படையில் முன் வைக்கப்பட்டதே!!! ( இந்த வரம்பை உயர்த்த சொல்லி அரசியல்வாதிகள் யார் என்பதை , நீங்களே யோசித்து கொள்ளுங்கள்) . என்னை பொறுத்த வரை, 8 லட்சம் என்பது அதீத அளவீடு தான்.

வருமான வரி விலக்கு 2.5 லட்சத்தில் இருக்கும் போதும், இந்தியாவின் தனிநபர் வருமான சராசரி, தோராயமாக 1,10,000 இருக்கும் போது, 8 லட்சம் என்பது அதீதம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment