Friday, July 26, 2019

இட ஒதுக்கீடும் எனது புரிதலும் 1


இடஒதுக்கீடு குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எனது புரிதலில் சிலவற்றை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.

அரசியலமைப்பின் முன்னுரையில், சமூக, அரசியல், பொருளாதார என்று மூன்று வகையான நீதியை மக்கள் அடைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற் போல்……. அரசியல் மக்களாட்சியை ஏற்படுத்த அடிப்படை உரிமைகளும், சமூக மற்றும் பொருளாதார மக்களாட்சியை ஏற்படுத்த அரசின் நெறிமுறை கோட்பாடுகளும் உள்ளது.

ஷரத் 15 என்பது பொது வெளியில் பாகுபாடு காட்ட கூடாது. அதே சமயத்தில் பெண்கள், பிற்படுத்த வகுப்பினர் மற்றும் அட்டவணை வகுப்பினருக்கு கல்வியில் இட ஒதுக்கீடு பற்றி பேசுகிறது. சமூக நீதியை ஏற்படுத்த, இந்த இட ஒதுக்கீடு முறை பரிந்துரைக்கிறது. ஷரத் 16 என்பது வேலைவாய்ப்பில் சமத்துவத்தை பேசுகிறது. மேற்கண்டதை போல் பிற்படுத்த வகுப்பினர் மற்றும் அட்டவணை வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பற்றி கூறுகிறது.

முன்னது முழுவதும் சமூக நீதியென்றாலும், பின்னதை முழுவதும் சமூக நீதி என்ற பார்வையோடு மட்டும் பார்க்க முடியாது. அதில் பொருளாதார நீதியும் அடங்கியே உள்ளது.
அதோடு மட்டுமில்லாமல், 1951 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதல் சட்டத்திருத்திலும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் சிறப்பு சலுகைகள்(இட ஒதுக்கீடு) வழங்க வழிவகை செய்தது. இதோடு ஷரத் 46 ல், அட்டவணை வகுப்பினர் மற்றும் இதர நலிந்த பிரிவினரை மேம்படுத்த, கல்வி மற்றும் பொருளாதார வளத்தினை அதிகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதில் தான் புதிதாக, 15(6), 17(6) முறையே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

நிற்க……

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி, 1990 ஆம் ஆண்டு இதர பிற்படுத்த வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1991 பொது பிரிவில் பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கும், கூடுதலாக 10 சதவீத ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்திர ஜாகனி வழக்கில்(1992), இட ஒதுக்கீடு முறை 50 சதவீதத்திற்கு கூடுதலாக இருக்க கூடாது என்றும், பொது பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு முறையும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. (ஆனால், மீண்டும் சட்டமின்றி கொண்டு வரப்பட்டுள்ளது)

நிற்க….

1994 ஆம் ஆண்டும், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதுவும் அரசியலமைப்பில் 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் 9 வது அட்டவணை என்பது நீதி மறு ஆய்வுக்கு உட்பட்டதல்ல என்று சொல்லியிருந்தனர். தற்சமயம்…. நீதி மறு ஆய்வு என்பது நீதிமன்றத்தின் அடிப்படை கட்டமைப்பில் ஒன்று என்று மினர்வ மில் வழக்கு, பொம்மை வழக்கு போன்ற பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. ஆதலால் நம்முடைய 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கு, நீதிமன்ற நிலுவையில் உள்ளது.

மேலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்….. 50 சதவீதத்திற்கும் அதிகமான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எ.கா- ஹரியானா- 70%, ஜார்கண்ட்- 60%, ராஜாஸ்தாந் 54%

மத்திய அரசு இட ஒதுக்கீடு முறைக்கும், மாநில அளவிலான இட ஒதுக்கீடு முறைக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளது. இரண்டையும் சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்.

ஜாதியை அடிப்படையாக கொண்டு மட்டும், மத்திய அரசின் ஒட ஒதுக்கீடு கொண்டு வர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எ.கா- ஜாட் இனத்தை இதர பிற்படுத்த வகுப்பினரில் மத்திய சேர்த்த போது, நீதிமன்றம் மறுத்து விட்டது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment